நான் அறிந்த சிலம்பு – 51 (24.12.12)
புகார்க்காண்டம் – 07. கானல் வரி
முகம் உடைவரி – ஆற்று வரி
காவிரியை நோக்கிப் பாடியன
(2)
காவிரியே!
மாலை அணிந்தவன்;
நிறைமதி போலும்
வெண்கொற்றக்குடை உடையவன்
உன் கணவன் சோழமன்னன்.
மாலை அணிந்தவன்;
நிறைமதி போலும்
வெண்கொற்றக்குடை உடையவன்
உன் கணவன் சோழமன்னன்.
அவன் தானும்
செங்கோல் அதனைச் செலுத்திக்
கங்கையைக் கூடியிருந்தாலும்,
நீ அவனை வெறுப்பதில்லை.
ஆதலினால் நீ வாழ்க!
செங்கோல் அதனைச் செலுத்திக்
கங்கையைக் கூடியிருந்தாலும்,
நீ அவனை வெறுப்பதில்லை.
ஆதலினால் நீ வாழ்க!
கங்கை என்னும் வேறொரு
வேறொரு பெண்ணைச் சேர்ந்து
உன் கணவன் வாழ்ந்தபோதும்
நீ அவனை வெறுக்காமல்
வாழக் காரணம்
உன் போன்ற காதல் மாந்தரின்
உயர் கற்புநெறி என்பதை
நான் அறிந்து கொண்டேன்.
வேறொரு பெண்ணைச் சேர்ந்து
உன் கணவன் வாழ்ந்தபோதும்
நீ அவனை வெறுக்காமல்
வாழக் காரணம்
உன் போன்ற காதல் மாந்தரின்
உயர் கற்புநெறி என்பதை
நான் அறிந்து கொண்டேன்.
நீ வாழ்க!
(3)
காவிரியே!
பெருமை பொருந்திய
நின் கணவன் சோழமன்னன்
வளையாத செங்கோலினைச்
செலுத்துபவன்.
பெருமை பொருந்திய
நின் கணவன் சோழமன்னன்
வளையாத செங்கோலினைச்
செலுத்துபவன்.
அவன் தானும்
வேறொரு குமரியுடன் கூடியிருந்தாலும்
நீ அவனை வெறுப்பதில்லை.
வேறொரு குமரியுடன் கூடியிருந்தாலும்
நீ அவனை வெறுப்பதில்லை.
ஆதலினால் நீ வாழ்க!
கயற்கண்ணாளே!
உன் கணவன் சோழமன்னன்
உன்னைத்தானும் பிரிந்து
வேறொரு கன்னியுடன் கூடினான்
என்பதை அறிந்தாலும்,
நீ அவனை வெறுக்காமல் இருப்பது
மாந்தரின் பெருமைமிக்க
கற்புநெறியால்தான் என்பதை
நான் அறிந்து கொண்டேன்.
நீ வாழ்க!
உன் கணவன் சோழமன்னன்
உன்னைத்தானும் பிரிந்து
வேறொரு கன்னியுடன் கூடினான்
என்பதை அறிந்தாலும்,
நீ அவனை வெறுக்காமல் இருப்பது
மாந்தரின் பெருமைமிக்க
கற்புநெறியால்தான் என்பதை
நான் அறிந்து கொண்டேன்.
நீ வாழ்க!
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1- 20
படத்துக்கு நன்றி
