அன்பு நண்பர்களுக்கு,
வணக்கம்
05.01.2013 – அன்று வந்தவாசியில் 
யுரேகா கல்வி உதவித் தொகைத் திட்டத்தில்
உதவி பெறும் 12ஆம் வகுப்பு மாணவிகள்
9 பேர்களுக்கு
சூரிய விளக்குகள் மற்றும்
டியூசன் பீஸ் வழங்கும் நிகழ்வு
அம்மையப்பட்டு யுரேகா கல்வி இயக்க
அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
மு.முருகேஷ் தலைமை ஏற்றார்.
நிகழ்வில் கலந்து கொண்ட
குழந்தைகளோடும், அவர்களுடைய
பெற்றோர்களோடும் கலந்துரையாடினார்.
12ஆம் வகுப்பு மாணவிகள் அனைவரும்
1150 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவதாக
உறுதியளித்தனர்.
நிகழ்வில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்
சு.உமாசங்கர் , தகவல் தொகுப்பாளர் சி.கோமதி
ஆகியோர் கலந்து கொண்டனர்.
-மு.மு , திட்ட மேலாளர்.

Leave a Reply