மு. முருகேஷ்

இவரின் இயற்பெயர் மு முருகேசன். எழுத்துக்காக மு முருகேஷ் ஆனவர். பெற்றோருக்காக இவர் படித்தது தொழில் நுட்பவியல்(DME). ஆனால் விரும்பிப் படித்ததோ தமிழ் இலக்கியம். தமிழ் இலக்கியத்தில் முதுகலை இள முனைவர் (MA MPhil)பட்டம் பெற்றவர். புதுக்கோட்டையை சொந்த ஊராகக் கொண்ட இவர் இலக்கிய இணை வெண்ணிலா அவர்களுடன் தற்போது வசிப்பது வந்தவாசியில். கால் நூற்றாண்டுக்கு மேலாக இவர் இலக்கிய செயல்பாடுகளில் தொடர்ச்சியாக பங்களித்துவருகிறார். இதுவரை பதினைந்து நூல்களை எழுதியுள்ள இவர் தற்போது யுரேகா கல்வி இயக்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றுகிறார். சமீபமாக குழந்தை இலக்கியம் படைப்பதில் மிகுந்த மன நிறைவு கொள்கிறார்.