சமூக சிந்தனைகளின் விளைநிலம் வகுப்பறைகளே.

0

 

நல்லாசிரியருக்கான பாராட்டு விழாவில் பேச்சு –


  வந்தவாசி.செப்.29.சமுதாயம் முன்னேறுவதற்கான சிந்தனைகளின் விளைநிலமாக என்றைக்கும் வகுப்பறைகளே விளங்குகின்றன என்று
நல்லாசிரியருக்கான பாராட்டுவிழாவில் யுரேகா கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.முருகேஷ் பேசினார்.
     இவ்விழாவிற்கு இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மாவட்ட கருத்தாளர் சு.உமாசங்கர் அனைவரையும் வரவேற்றார்.
   தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தென்னாங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் இ.முல்லையை, தென்னாங்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம்.தினகரசு வாழ்த்திப் பேசினார்.
   நிகழ்வில்,பாராட்டுரை வழங்கிய கவிஞர் மு.முருகேஷ் பேசும்போது, ஆசிரியர்களைப் பாராட்டும்போது ஒருசமுதாயம் சரியான பாதையில் வழி நடத்தப்படுகிறது என்று அர்த்தம்.ஒவ்வொரு மனிதனின் அறிவு
வளர்ச்சிக்கும் அடித்தளமிடுபவை ஆரம்பப் பள்ளிகளே.
    ஒரு ஜனாதிபதி நினைத்தால் ஒரு மருத்துவரை உருவாக்க முடியாது. ஒரு பிரதமர் முயன்றாலும் ஒரு பொறியாளரை உருவாக்க முடியாது.ஆனால், ஒரு ஆசிரியர் நினைத்தால் ஒரு மருத்துவரை, ஒரு பொறியாளரை, ஏன் ஒரு
ஜனாதிபதியைக் கூட உருவாக்கலாம்.
   தகுதியான ஆசிரியர்களைப் பாராட்டினால், இன்னும் திறமையான வெற்றியாளர்களை ஆசிரியர்கள் சமுதாயத்துக்கு உருவாக்கித் தருவார்கள்.
எந்த ஒரு நல்ல சமுதாய முன்னேற்றத்திற்கான சிந்தனைகளும் உருவாகிற விளைநிலமாக இன்றைக்கும் வகுப்பறைகளே விளங்குகின்றனஎன்று குறிப்பிட்டார்.
    நிறைவாக, மாவட்டக் கருத்தாளர் மா.குமரன் நன்றி கூறினார்.

படக்குறிப்பு ;
   வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் ந்டைபெற்ற தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தென்னாங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
தலைமையாசிரியர் இ.முல்லைக்கு, இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் இரா.சிவக்குமார் நினைவு பரிசு வழங்கியபோது எடுத்த படம். அருகில், (இடமிருந்து)
மாவட்ட கருத்தாளர்கள் மா.குமரன்.சு.உமாசங்கர்,  யுரேகா கல்வி இயக்க மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.முருகேஷ், தென்னாங்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம்.தினகரசு ஆகியோர் உள்ளனர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.