ஐக்கியா டிரஸ்ட் கவிதைப் போட்டி
வையவன்
காந்தி ஜெயந்தி
காந்தி என்பது ஒரு தலைவரின் பெயர் மட்டுமல்ல. தேசத் தந்தையின் பெயர் மட்டுமல்ல. பாரதநாடு என்ற மகத்தான தேசத்தின் , அழியாச் சுடர் போன்று ஒளிவீசி நிற்கும் ஒரு பண்பாட்டின் பெயர். காரிருள் நிலைப்பதில்லை. ஒளி தொடரும் அதற்கும் ஓர் உதய வேளை உண்டு என்று அறிவித்த நம்பிக்கையின் பெயர் அது. காந்தி என்றாலே ஒளி என்று தான் பொருள்.
அந்த நம்பிக்கையின் சின்னமாக யாஹூ இணையதளத்தின் தமிழ்ப் பிரிவு ஆசிரியரும் வல்லமை மின்னிதழின் நிறுவன ஆசிரியருமான அண்ணா கண்ணன் அவர்கள் எழுதிய கவிதை இது. நமது மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய கவிஞர் பெருமக்களையும் வாசக அன்பர்களையும் அக்டோபர் 2 என்ற அளவில் அக்டோபர் 15 வரை தங்கள் கவிதைகளை காந்தி அஞ்சலியாக நமது இணையவெளிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். தங்கள் பார்வையில் மிகச்சிறந்த கவிஞர் என்று கருதப்படும் ஒருவருக்கு அன்புகூர்ந்து சிரமம் பாராது இந்த மெயில் அனுப்பிவையுங்கள். மெயிலில் படைப்புகளை அனுப்பலாம் .
vaiyavan.mspm@google.com.
மற்றும் அஞ்சலிலும் அனுப்பலாம். முகவரி.:-
Vaiyavan,
Editor Innaiyaveli.,
1,First Street, Chandrabagh Avanue,
Mylapore,
Chennai-600004,
phone.9940120341
பிரசுரமாகும் ஒவ்வொரு படைப்பிற்கும் , ஒவ்வொருவருக்கும், ஐக்யா டிரஸ்ட் வழங்கும் புத்தகம் ஒன்று பரிசளிக்கப்படும் . அவசியம் படைப்பாளிகள் தங்களது புகைப்படம் அனுப்பிவைக்க வேண்டும் . சுருக்கம், தெளிவு, எளிமை, புதிய சிந்தனை வீச்சுடன் கூடியதாக அமையும் கவிதைகளைத் தொகுத்து தாரிணி பதிப்பகம் நூலாக வெளியிடும்.அன்புகூர்ந்து தங்கள் புகைப்படம் மற்றும் சுருக்கமான விவரங்கள் இணைத்து அனுப்பவும் -நிர்வாக ஆசிரியர் இணையவெளி