பி.தமிழ்முகில் நீலமேகம்

 

ஆதவன் கூட தூக்கக் கலக்கத்தினின்று

விடுபடாத இந்த கருக்கலில்

எங்கோ அவசரமாய்

எதையோ தேடி ஓடுகிறீர்களே…..

எனதருமை மானிடர்களே…

சற்று நில்லுங்கள்!!!

எங்கே செல்கிறீர்கள்?

உங்களது இல்லத்திற்கா? அல்லது…

அலுவலகத்திற்கா??

இரவெல்லாம் கண்விழித்து

பகலெல்லாம் கண்ணயரும் அதிசயம்

உங்களிடம் மட்டும் தான் காண்கிறேன்…

அதுவும்…. சில காலமாய்த்தான்…

சுறுசுறுப்பாய் செயல்பட  பகலையும்….

இளைப்பாறித் துயிலுற இரவையும்

இறைவன் காரணமின்றிப் படைத்திருக்க மாட்டான்!!!

ஆனால் …..  இன்றோ…..

அனைத்தும் தலைகீழாய்….

ஏனிந்த முரணான மாற்றம்????

படத்திற்கு நன்றி:

http://www.prelovac.com/vladimir/beautiful-nature-pictures

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *