நான் அறிந்த சிலம்பு – 56 (28.01.13)

மலர் சபா

புகார்க் காண்டம் – 07. கானல் வரி

(12)

கரையினில் அலைகள்
எறிந்திடும் சங்குகளின்
முழக்கத்துக்கு அஞ்சி,
குருதிக்கறை இருபுறமும் படிந்த
செவ்வரி படர்ந்த
வேல் போலும்
கண்களையுடைய இவள்தான்
கொடிய கூற்றமோ?!

கடல்வளம் பொருந்திநிற்கும்
சிறிய இவ்வூர்தன்னில்
அழகு பொருந்திய
மென்சாயல் பெண்ணுருவில்
அக்கூற்றந்தான் வந்துள்ளதோ!

(13)

புலால் நாறும் மீன்களின்
வெள்ளிய வற்றலைக்
கவரவரும் பறவைகளை விரட்டி,
தன்னைக் காண்போரை எல்லாம்
மனம் தடுமாறச் செய்து,
காமநோய் வசப்படுத்தி
வருத்திநிற்கும் அணங்கு இவள்தானோ?!

அடும்ப மலர்கள்
நிறைந்து நிற்கும்
குளிர்ந்த கானலிலே
செறிந்த மெல்லிய கூந்தலையுடைய
பெண்வடிவம் கொண்டுதான்
ஓர் அணங்கு வந்துள்ளதோ?!

அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram19.html

படத்துக்கு நன்றி:
http://my.opera.com/heisenberg16/albums/showpic.dml?album=8923052&picture=125081982

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *