அறுமுகநூறு (1)
-D.சச்சிதானந்தம்-
காப்பு
கணபதி என்னும் குணபதி போற்றி,
சினமதி நீக்கும் அவனடி போற்றி,
தனபதி சிறுமதி களைந்தவன் போற்றி,
மனமதில் பூத்த பாசெய் கின்றேன்!
நூல்
வெண்முக நிலவின் தண்முகம் தன்னைத்
தன்முக மாகக் கொண்டசண் முகனை
இன்முகம் கொண்டு என்மனம் தன்னில்,
கொண்டொரு பன்முகப் பாசெய் கின்றேன்! 1
சிவன்மலை ஆண்டவன் சீரடி போற்றி,
சினங்கொண்டு தணிந்தவன் திருவடி போற்றி,
சிகரங்கள் தோறும் சேர்ந்தவன் போற்றி,
சிவந்தசெவ் வடியினைச் சிரங்கொண்டு தொழுவோம்! 2
படியேறி வந்துனது மடி ஏறுவேன்,
மடியேறி உன்மனதில் குடி ஏறுவேன்,
கொடியேறும் சேவலுடன் படி ஏறியே.
அடிமீது அடிவைத்து வருவே னடா! 3
படிக்கொரு பாடல் கொடுப்பாய் போற்றி,
படித்திடும் ஆவல் விதைப்பாய் போற்றி,
பனிக்குட வாழ்வை அறுப்பாய் போற்றி,
படைத்தவ னுன்னை அடைவேன் போற்றி! 4
அடிக்கொரு பாடல் அருள்வாய் போற்றி,
அனைத்துல குயிரின் கருவே போற்றி,
அமைத்தொரு பாவைத் தருவாய் போற்றி,
அடிக் கரும்பாக இனிப்பாய் போற்றி! 5
(தொடரும்)
படத்துக்கு நன்றி: http://murugan.org/screensavers.htm
வாழ்த்துகள் நண்பா! தமிழ்க்கடவுளின் அருள் உனக்கு கிடைக்கட்டும்!
உன் தமிழ்ப்பணி வல்லமையில் துவங்குவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. வல்லமைக்கு நன்றி!
நன்றி இளங்கோ. உனது முயற்சியாலும் உதவியாலுமே இந்த வாய்ப்பு சாத்தியமாயிற்று.
கவிதை சுவையாகப் படைக்கப்பட்டுள்ளது. புதிய எழுத்தாளருக்கு நல்வரவு!
நன்றி மேகலா இராமமூர்த்தி
கவிதை அற்புதமாக உள்ளது. தொடர்ந்து உங்கள் கவிதைகளை படிக்க ஆவலாக உள்ளேன். வாழ்த்துக்கள், அண்ணா.
தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி பிரியா.
முதல் பாடலே மிகவும் அழகு! மேலும் வாசிக்க ஆவலுடன்…
ஊக்கம் கொடுக்கும் தங்களது சொற்களுக்கு நன்றி கவிநயா அவர்களே!
இளங்கோ வழியாக இங்கு வந்து அடைந்தேன், அருமையான கவிதை. உன்னுடைய சாதி நாக கவிதை படித்தேன், அற்புதுமான வரிகள், உயரிய சிந்தனை. பெருமையாக இருக்கிறது. சச்சிதானந்தம் மெச்சி -தானந்தம்.
உன்னை இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி மயில். உனது வாழ்த்திற்கு எனது நன்றிகள்.
முதல் பாடலே முத்தாக…. இது கண்டிப்பாக வல்லமையின் சொத்தாக இருக்கும். அழகிய படைப்புக்கு நன்றி
நன்றி திருமதி.ஆதிரா.