சாலை விபத்துகள்: அமைச்சர் கவலை
நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதால் பொருளாதாரம், பொது சுகாதாரம் மற்றும் பொதுமக்கள் நல வழ்வில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதற்குச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டாக்டர் சி. பி. ஜோஷி கவலை தெரிவித்துள்ளார்.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் சாலைப் பாதுகாப்பு குறித்த ஏழாவது ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசியபோது இவ்வாறு கவலை தெரிவித்த அமைச்சர், பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் ஒட்டுமொத்த நிலை திருப்திகரமானதாக இல்லை என்று குறிப்பிட்டார்.
சாலை விபத்துகளால் ஏற்படும் காயங்கள் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. இதனால் உயிரிழப்புகள், உறுப்புச் சிதைவுகள் மற்றும் மருத்துவமனைகள் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு, கடுமையான சமூகப் பொருளாதார பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
விபத்துகளைத் தடுப்பதில் கல்வி, செயலாக்கம், பொறியியல் மற்றும் அவசர கால உதவி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பல்வேறு சாலைப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்துப் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர்கள் ஜித்தின் பிரசாத் மற்றும் துஷாத் பாய் ஏ சவுத்திரி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
===================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை
மரியாதைக்குரிய அமைச்சர் அவர்களே!
உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால், விபத்திலே உயிரிழப்பு ஏற்படுத்தும் ஓட்டுனருக்கு “வாழ்நாள் சிறை!” “No Bail and No Parole!” என்ற சட்டத்தைக் கையெழுத்து ஆக்க முடியுமா?
விரயமாய் ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்காதீர்! அப்படிஎதுவும் நீர் செய்யும் வரை, உங்களுடைய “கவலை தெரிவிப்பு” கட்டாயம் காற்றோடு தான் போகும்!