காயத்ரி பாலசுப்ரமணியன்

மேஷம்: மாணவர்கள் சிறிய தவறுகளையும் உடனுக்குடன் சரிசெய்தால், படிப்பிற்கு எந்த பாதிப்பும் நேராது. பெண்கள் மனதில் பட்ட கருத்தை சொல்லும் முன் அக்கம் பக்கம் பார்த்து பக்குவமாகப் பேசுதல் அவசியம். பணியில் இருப்போர்கள் சில சில்லறைப் பிரசனைகளை சமாளிப்பதோடு சில சமயம் உழைப்பிற்குரிய பாராட்டை கேட்டு பெற வேண்டியிருக்கும். இந்த வாரம் தந்தை வழி உறவுகள் சற்றே அதிருப்தியை காட்டுவார்கள். கலைஞர்கள் அடுத்தவரின் விஷயங்களில் தலையிடா மல் இருந்தாலே , பாதிப் பிரச்னைகள் தீர்ந்து விடும். வியாபாரிகள் வங்கிகள் தரும் அறிக்கைகளை பத்திரமாக வைத்தால், அபராதத்தைத் தவிர்க்க முடியும்.

ரிஷபம்: சரக்குகள் தேங்காதவாறு வியாபாரத்தை முடுக்கிவிடும் வியாபாரிகளுக்கு லாபத்தோடு புதிய ஒப்பந்தங்களும் உடன் வந்து சேரும்.பிறர் செய்யும் தவறுக்கு, நீங்கள் பதில் சொல்லும் சூழல் உருவாகும் நிலை இருப்பதால், மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். தந்தை-மகள் உறவு நெருக்கமாகும். இதுவரை இருந்த மனத் தாங்கல் நீங்கி, ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வீர்கள். பெண்கள் அவ்வப்போது தோன்றும் சிறிய பிரச்னைகளை,தெளிவுடனும், திறமையுடனும் கையாண்டால் உறவுகளின் ஆதரவு உங்கள் பலமாய் மாறும். ஆன்மீகப் பயணங்களுக்கான அழைப்பு உங்களைத் தேடி வரும்!.

மிதுனம்: பெண்கள் அடிக்கடி வரும் கோபத்தை குறைத்து கொண்டால், இல்லத்தில் சச்சரவு எழாது. மாணவர்கள் தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் தராமல், படிப்பில் கவனம் செலுத்தி வாருங்கள். அதிக நேரம் பணியில் ஈடுபடுபவர்கள் உடல் நலனில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டிய வாரமிது. நீங்கள் எங்கு பணி புரிந்தாலும், சொல்,செயல் ஆகிய இரண்டிலும் நிதானத்தைக் காட்டி வந்தால், எந்த நிலைமையும் சமாளித்து விடலாம். வியாபாரிகள் வாக்குறுதிகளை வழங்குவதைக் காட்டிலும் அதை நிறைவேற்றி வைப்பதில் கவனமாய் இருந்தால், சிக்கல்கள் ஏதும் வராது. அனைவரை யும் அனுசரித்துச் செல்வதன் மூலம் கலைஞர்களுக்கு ஆதாயம் இரட்டிப்பாகும்.

கடகம்: உங்களின் நிதி நிலைமைக்கேற்றவாறு காசோலைகளை பயன்படுத்துவது நல்லது. புதிய நபர்களிடம் வியாபார ஒப்பந்தம் செய்யும் முன்பு, அவர்களின் பொருளாதாரம், முன் அனுபவம் ஆகியவற்றை அறிந்து செயல்படவும். பணியில் பொறுமையை சோதிக்கும் சந்தர்ப்பங்களையும், லாவகமாக கையாண்டால், மன அமைதிக்கு பங்கம் வராது. சுய தொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகள் வெற்றி பெறுவதற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும்.மாணவர்கள் நாவடக்கம் நன்மையைத் தரும் என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டால், நற்பெயரை எளிதில் தக்க வைத்துக் கொள்ள இயலும்.

சிம்மம்: சிலருக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று மகிழும் வாய்ப்பு கிட்டும். கர்ப்பிணிப் பெண்கள் உடலில் சில அசௌகரியங்கள் தோன்றி மறையலாம். தகுந்த மருந்து களை உட்கொண்டால், ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணியில் இருப்பவர் களை கவனத் தடுமாற்றம், மறதி ஆகியவை அலைக்கழிக்கும். மாணவர்கள் வெளி வட்டாரப் பழக்கங்களில் தராதரமறிந்து பழகிவந்தால், வீண் சங்கடங்கள் உங்களை அண்டாது. கலைஞர்கள் அபவாதங்களுக்கு இடமளிக்காதவாறு உறுதியாய் செயல் படுங்கள். வியாபாரிகள் ஏனோதானோவென்று பணிகளைச் செய்யாமல், தகுந்த திட்டப்படி செய்தால், குழப்பங்களைத் தவிர்த்து விடலாம்.

கன்னி: உயர்ந்த பதவியில் இருப்போர்கள், பிறரின் குற்றம் குறைகளை இதமாக சுட்டிக் காட்டினால், வேலைகள் தேங்காமல் முடிந்து விடும். இந்த வாரம் பெண்கள் உறவுகளி டமிருந்து அதிக சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. பொது சேவையில் ஈடுபட்டுள்ள வர்கள் பொதுப்பிரச்னைகளைத் தீர்க்க, புத்திசாலித்தனமும், பொறுமையுமே உதவும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் தகுதிக்கேற்ற நட்பைத் தேடிக் கொண்டால், வீண் தலைவலியை தவிர்த்து விடலாம். வியாபாரிகள் புதிய முயற்சிகளுக்குத் தேவையான பக்கபலத்துடன் களம் இறங்கினால், நினைத்ததை சாதிக்க இயலும்.

துலாம்: பணி புரிபவர்கள் உடனிருந்தே காலை வாருபவர்களிடம் உஷாராக இருந்தால், உங்கள் உழைப்பு வீணாகாமலிருக்கும். பெண்கள் உபத்திரவம் தரும் அண்டை அயலா ரை அருகில் சேர்க்காதீர்கள். உங்களின் விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப் பாக வைத்தால், வீண் கலக்கத்தை தவிர்த்து விடலாம். உங்களின் பழைய அனுபவம், தொடர்புகள் ஆகியவற்றின் உதவி கொண்டு வியாபார சிக்கலைத் தீர்க்க இது ஏற்ற வாரம். கலைஞர்கள் சுற்றியிருப்பவர்களால் வீண் செலவுகள் செய்ய வேண்டிய சுழலுக் குத் தள்ளப்படுவர். மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளில் அதிக கவனம் தேவை.

விருச்சிகம்: வியாபாரிகள் உங்கள் சேவையை விமர்சனம் செய்யும் வாடிக் கையாளர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். மாணவர்கள் புதிய இடங்களில், உணவுக் கட்டுப்பாட்டை கடை பிடித்தால், உடல்நலம் நன்றாகத் திகழும். புதிய வீடுகள் மற்றும் மனைகளை வாங்கும் முன் பத்திரங்களைச் சரிபார்ப்பது அவசியம். வீண் ஜம்பம், வேண்டாத பெருமை இரண்டையும் விலக்கிவிட்டால், கலைஞர்கள் நிம்மதியாய் வேலை செய்யலாம். பணியில் இருப்பவர்கள் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்பட்டால், உயரதிகாரிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக முடியும். பெண்களுக்கு வேலை பளு கூடலாம்.

தனுசு: கடன் தொல்லைகளினால் சிறிது மன சஞ்சலம் ஏற்பட்டாலும், சிக்கல் வராமல் இந்த வாரம் சமாளித்து விடுவீர்கள். பங்குதாரார்களின் ஆதரவால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கலைஞர்கள் அதிக புகழ்ச்சி எனும் வலை விரிப்பவரிடம் மாட்டிக் கொள்ளாமல் விலகியே இருங்கள். பணியிடத்தில் பிறர் கூறும் குற்றம், குறைகளுக்காக அவர்களிடம் வாக்கு வாதத்தில் இறங்குவதை தவிர்த்துவிடவும். சில சந்தர்ப் பங்களில்,நண்பர்களே உங்களை எதிரியாய் கருதி உங்களோடு மோதும் நிலை உருவாகும். தேவையில்லாமல் பெண்கள் தங்கள் அலுவலக ரகசியங்களை பிறரிடம் கொட்ட வேண்டாம் .

மகரம்: எதிரும் புதிரும் இருந்த உறவுகள், நெருங்கி வருவதால், பெண்கள் மகிழ்ச்சி யுடன் திகழ்வார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவது அவசியம். மாணவர்கள் சின்னசின்ன விஷயங்களுக்கு உணர்ச்சி வசப் படுவதைத் தவிர்த்தல் நலம். தம்பதிகளுக்குள் அனுசரணையும், புரிதலும் இருந் தால், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் தங்கும். பணியில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு களை விருப்பமுடன் ஏற்றுக் கொள்வவதால், நல்ல பெயரோடு பதவி உயர்வும் வந்து சேரும். தொழிலாளர்கள் இடையே தோன்றும் மன வேறுபாடுகள் பெரிதாகாமல் இருக்க அவர்களை தட்டிக் கொடுத்து செல்லுங்கள். வியாபாரம் சீராக இருக்கும்.

கும்பம்:வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்ளும் முன், அதில் உள்ள நிறைகுறைகளை உணர்ந்து செயல்படுவது நலம். பெண்கள் பிள்ளைகளின் கூடாத நட்பினால் தோன்றும் பிரச்னைகளை முளையிலேயே கிள்ளுவது புத்திசாலித்தனமான செயலாகும். நீங்கள் எதிர்பார்த்தவகைகளில் வரும் அதிக வரவால் பழைய கடன்களை தீர்க்க தேவையான பணம் கிடைக்கும். சுய தொழிலில் தோன்றும் கஷ்டங்களைக் கடக்க உங்கள் உழைப் பும், சாமர்த்தியமும் கை கொடுக்கும். கலைஞர்கள் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல தகவல்கள் கிடைக்கும் வரை பொறுமையாய் இருப்பது அவசியம்.

மீனம்: வியாபாரிகள் புதிய திட்டங்களை செயல்படுத்துதல், விரிவாக்கம் ஆகியவற்றை மனம் விரும்பியவாறு செய்து முடிப்பர். வெளிநாடுகளில் வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களின் கனவு நிறைவேறும். வேலைப்பளு இருந்தாலும், பெண்கள் சத்தான உணவை உண்டு வந்தால், அயர்ச்சியும், ஆயாசமும் தலை காட்டாது. சக மாணவர்களோடு ஏற்படும் மனத்தாங்கலை மனம் விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்வதன் மூலம் நட்பில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளலாம். வேலைக்கு செல்பவர் தெளிவான மனதுடன் பணியில் ஈடுபடுவது நல்லது. விட்டுக் கொடுத்தால் வெற்றி கிடைக்கும் என்பதை உணர்ந்த கலைஞர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.