மலர் சபா

புகார்க்காண்டம் – 08. வேனில் காதை
யாழ் மீட்டிப் பாடி, புறத்து ஒரு பாணியில் மாதவி மயங்குதல்
வலக்கையதன் பெருவிரல் வளைத்து
மற்ற விரல்களை நிமிர்த்தி
யாழதன் தண்டின் மீது
அக்கையை வைத்து
அது அசைந்திடாதபடி பிடித்தாள்.
இடக்கையதன் நான்கு விரல்களை

மாடகம் எனும்
இசை வீக்கும் கருவி மீது பொருத்தி
செம்பகை, ஆர்ப்பு, அதிர்வு, கோடம் எனும்
பகை நரம்புகள் நான்கும்
புகுந்துவிடாமல் நீக்கிடும்
வழியது கடைப்பிடித்தாள்.

முறைதவறா மரபு சார்ந்த்
ஈரேழ் கோவையாய் அமைக்கப்பட்ட
அந்த யாழ்தன்னில்
முதலாக ‘உழை’ நரம்பினையும்
இறுதியாக கைக்கிளை நரம்பினையும்
வைத்தேதான் கட்டினாள்.

இணை, கிளை, பகை, நட்பு எனும்
இந்நான்கு நரம்புகளின் வழியே
இசையது புணரும் குறிநிலையதனைப்
பொருத்தமுறவே நோக்கினாள்.

அது மட்டுமன்றி
குரல் – இளி எனும்
இரு நரம்புகளின்
இசை ஒத்திருப்பதைத்
தன் செவியால் அளந்தே அறிந்திட்டாள்.

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 27 – 35
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram23.html

படத்துக்கு நன்றி:
hool.discoveryeducation.com/clipart/clip/harp.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.