இன்னம்பூர் பற்றிய தகவல்!..
விசாலம்
சமீபத்தில் திரு இன்னம்பூரான் அவர்களைக் காணும் பாக்கியம் கிடைத்தது அவரது பெயர் அவரது ஊரைக்கொண்டு வைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொண்டேன் என் வீட்டின் கீழே இருக்கும் வைஷ்ணவர் சமீபத்தில் கும்பகோணம் போய் அருகில் இருந்த பல பெயர்ப்பெற்ற கோயில்களைக் கண்டு அதன் குறிப்புகளையும் கொண்டு வந்திருந்தார்.ஏனென்றால் நான் எப்போதும் கோயில் பற்றிய செய்திகளை அறிய ஆவலாக இருப்பது அவருக்கு தெரியும் .அதில் அவர் போன கோயிலில் ஒன்று இன்னம்பூர் .
ஆஹா அருமையான செய்தி என்று அவரிடம் பேசி பல தகவல்களைத்தெரிந்து கொண்டேன் ,இந்த இடம் முழுவதும் முதலில் சண்பகமரங்கள் மிகுந்த காடுகளாக இருந்தன.ஆகையால் இதற்கு சம்பகாரண்யம் என்ற பெயர் இருந்தது ஒரு சமயம் ஒரு காட்டு யானை அங்கு வந்தது அதற்கு மிகுந்த தாகம் ஏற்பட்டதால் நீரைத் தேடியது .தண்ணீர் கிடைக்காததால் தன் தும்பிக்கையினால் பூமியைத்தோண்ட முற்பட்டது.”டபார்”என்ற வெடி சத்தம் பூமி வெடித்து இன்னம்பரான் என்று போற்றப்படும் சிவன் லிங்கரூபமாக தோன்றினார் காட்டுயானை அருகிலேயே தீர்த்தம் ஏற்படுத்தி சிவனை வழிப்பட்டது.இந்த இடத்தில் பூஜை செய்ய சர்வ பாபங்களும் விலகுமாம் ஏனென்றால் இந்திரனது யானை ஐராவதம் பாற்கடலில் தோன்றி நாலு கொம்புகளைக் கொண்டது ஒரு சமயம் துர்வாசருக்கு மரியாதை கொடுக்கத்தவறியது துர்வாசரது கோபம் தான் தெரியுமே .பிடி சாபம் என்று சபித்துவிட்டார் மன்னிப்பு கேட்டவுடன் இன்னம்பூரில்தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி இறைவனை வழிபட சாபம் தீரும் என அறிந்து தீர்த்தம் உண்டுபண்ணியது பின் அதில் ஸ்னானம் செய்து சாபத்தைத் தீர்த்துக்கொண்டது அந்தத்தீர்த்தம்தான் “ஐராவத தீர்த்தம் “
கோபுரம் தாண்டி வெளிப்பிரகாரத்தில் கணபதி பலி பீடம் ,நந்தி , சுகந்த குந்தளாம்பாள் அம்மன் எல்லாம் பார்க்கமுடிகிறது உள் பிரகாரம் வந்து மூலவர் நோக்கி நகர ஒருதூணில் நடனம் ஆடும் கணபதி அழகு சொட்ட ஆடுகிறார் பின் வருகிறது நித்யகல்யாணி அம்பாள் சந்நிதி அம்பாளின் அழகு முகமும் அதில் தவிழும் புன்னகையும் அந்த இடத்தை விட்டு அகல தோன்றுவதில்லை மூலவர் சந்நிதியில் துவாரபாலகரை தரிசனம் செய்து விட்டு உள்ளே பார்க்க அங்கிருக்கும் ஈசன் ஸ்ரீ அட்சரபுரீஸ்வரர் என்ற பெயரில் அருள் புரிகிறார் தமிழில் அவர் பெயர் அருள்மிகு எழுத்தறிநாதர் .தமிழ் ஞானம் பெற்ற அகஸ்திய மஹரிஷி தமிழ் இலக்கியம் படிக்க இன்னம்பூருக்கு வந்து தான் தமிழ் இலக்கணம் கற்றாராம் இதனால் இந்த ஈசனுக்கு அட்சரபுரிஸ்வரர் என்ற பெயர் வந்தது என்கின்றனர் சிலர் .படிப்பில் வெற்றியடைய .காலேஜில் இடம் கிடைக்க வெளிநாடுக்கு மேற்படிப்புக்குச்செல்ல இங்கு பலர் வந்து பிரார்த்தனை செய்கின்றனர் முதன் முதலாக அட்சராப்பியாசம் செய்யவும் சிறு குழந்தைகளுடன் தாய்மார்கள் வருகின்றனர் திக்கித்திக்கிப்பேசும் குழந்தைகளுக்கு நாக்கில் ஈசனது மலரால் எழுத அந்த எழுத்தறிநாதர் நல்ல பேச்சுத்திறனை அளித்துவிடுகிறார்.இதனால் இவரே பிரும்மா,சரஸ்வதி ஆகிவிடுகிறார் பாபங்களைப் போக்குவதால் இவரே பரிகாரஸ்தலமாகி அருள்புரிகிறார் கும்பகோணம் திருவையாறு பாதையில் புளியஞ்சேரி என்ற இடம் வரும். அதிலிருந்து வலதுபக்கம் திரும்பி திருப்புறம்பியம் வழியாக சுமார் 2 கிமீ சென்றால் இன்னம்பூர் வந்துவிடும் மேலும் பல தகவல்கள் அடுத்த பகுதியில் எழுதுகிறேன்