மலர் சபாtemple

புகார்க்காண்டம் – 09. கனாத்திறம் உரைத்த காதை

மகளிர் இரவிற்கு ஏற்ற கோலம் கொண்டு இல் உறை தெய்வத்தை வழிபடுதல

கொடி போன்ற இடையுடைய மகளிர்
பகலவன் மறைந்திட்ட
மாலைப் பொழுதினில்
அகன்று விளங்கும் தம் வீடு எங்கிலும்
அரும்பு அவிழ்ந்து ஒளிவீசும்
முல்லை மலர்களை
நெல்லுடன் தூவினர்.

இல் உறை தெய்வத்தை வணங்குதற்பொருட்டு
மணிவிளக்கையும் ஏற்றிவைத்தனர்.
கணவனுடன் கூடி மகிழவென்று
இரவுக்கென்று பொருத்தமாக
ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டனர்.

மாலதியின் வரலாறு

மாலதி இறந்த மகவைக் கொண்டு தெய்வக் கோட்டங்களுக்குச் சென்று,வரம் வேண்டுதல்

முன்னொரு நாளில் மாலதி எனும் ஒரு பெண்
தன் மார்பில் சுரந்த பாலைச் சங்கில் எடுத்து
தன் மாற்றாள் குழந்தைக்குப்  புகட்ட.
பால் விக்கியதால் குழந்தை மரித்தது.
இதனால் தன் கணவனும் மாற்றாளும்
தன் மேல் அடாத பழியெல்லாம் கூறுவார்களே
என்று எண்ணிய மாலதி தவித்தாள்.

அக்குழந்தையை எடுத்துக்கொண்டு
தேவ மரமாகிய கற்பகத்தரு நிற்கும் கோவில்,
ஐராவதம் நிற்கும் கோவில்,
அழகிய வெண்மையான மேனியுடைய தேவர் கோவில்,
பகல் பொழுதுக்கு வாயிலான
கிழக்குத் திசையில் தோன்றும் சூரியன் கோவில்,
ஊரின் காவலான தெய்வம் நிற்கும் கோவில்,
முருகவேள் கோவில்,
இந்திரன் படைக்கலமான வச்சிரம் நிற்கும் கோவில்,
ஐயனார் கோவில், அருகன் கோவில், சந்திரன் கோவில்,
இக்கோவில்கள் எங்கும் புகுந்து,

“தெய்வங்களே! நான் உற்ற துயர் தீர்த்தருள்வீர்”
என வேண்டி நின்றாள்.
எந்த ஒரு தெய்வமும்
அவளுக்காய் இரங்கவில்லை.

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1 – 22
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram25.html

படத்துக்கு நன்றி:
http://www.himalayanacademy.com/media/books/danzando-con-siva_es/web/ops/xhtml/dws_spanish_r6_timeline.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.