புவனேஷ்வர்
ஸ்ரீ காமாக்ஷி துணை:
மயங்கிய நிலை:
தீதிது செய்ய நலமிதென் றறியோம்
மோதிடு மதங்கொள் கரிபோல் மதியோம்;
சோதியன் செவ்வடி சிந்தனை செய்யோம்
செய்யா தன செய்வோம்;
உய்யும் வழிசெயல் செய்யோம் மெய்யின்
பொய்யா ரனுபவம் மெய்யாய்க் கொண்டே
செய்யா தனபல செய்துழி வீழ்வோம்
மெய்யா னதுகா ணோம்.
அண்டங் கொண்டது பிண்டங் கொள்ளும்
கண்டங் கருத்தவன் கார்முகில் வண்ணன்
உண்டான் உலகம் உலகே ழானான்
உண்மை யதை யுணரோம்;
உய்த நிலை:
போற்றியெனப் பணிந்துவிட் டோமெம் மம்மை
பொன்னடிக்குப்பல் லாயிரம் போற்றி காண்;
தாயெனக் கொண்டுவிட் டோம் – பெற்ற
சேய்பண்ணும் சேட்டைகள் தாய்பொறுப் பாள்!
உய்வித் தெமைக் காப்பாள்கா ணன்னை
கொய்மலர் வண்டார் குழலிகா மாக்ஷி;
வேறென்ற நிலை களைவா ளொருமாயத்
திரை கிழித்தேகிடக் கரந் தருவாள் .
படத்துக்கு நன்றி: http://blaufraustein.wordpress.com/2012/09/16/haindava-thiruvalam-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0/


Leave a Reply