நான் அறிந்த சிலம்பு – 88 (09.09.13)
தேவந்தி கண்ணகியிடம் சென்று ஆசி கூறுதல்
குறைவில்லாத நிறைந்த புகழையுடைய
தன் தோழி கண்ணகி
தன் கணவனைப் பிரிந்து வருந்துகிறாளே
என்று எண்ணிய தேவந்தி
கோயிலுக்குச் சென்று
அறுகு, சிறுபூளை மற்றும் நெல் தூவி வழிபட்டுக்
கண்ணகி தன் கணவனை
மீண்டும் பெற வேண்டினாள்.
பின் கண்ணகியிடம்
“நீ உன் கணவனைப் பெற்று வாழ்வாயாக”
எனக் கூறினாள்.
கண்ணகி தான் கண்ட கனாவினைத் தேவந்திக்கு உரைத்தல்
அது கேட்ட கண்ணகி
தேவந்தியிடம் கூறினாள்:
“செறிந்த வளையலை அணிந்தவளே!
நீ இங்ஙனம் கூறக்கேட்டு
ஆறுதல் அடைந்தாலும்
நான் கண்ட ஒரு கனவினால்
என் நெஞ்சம் என்ன நேருமோ
என்று பயமடைகிறது.
அந்தக் கனவு என்னவென்றால்…..
என் கணவர் என்னைக்
கைப்பிடித்து அழைத்துச்செல்ல
நாங்கள் இருவரும்
ஒரு பெரிய நகரம் புகுந்தோம்.
அங்ஙனம் புகுந்த் ஊரில் உள்ளவர்கள்
இடக்கூடாத பழியை எங்கள் மீது
இடுதேளாய் இட்டனர்.
அப்பழியின் காரணமாக
என் கணவன் கோவலனுக்கு
மிக்க தீங்கு ஒன்று ஏற்பட்டது என்று
ஊரார் கூறக்கேட்ட நானும்
அரசனின் அவை சென்று வழக்குரைத்தேன்.
அதனால் அம்மன்னனுக்கும் ஊருக்கும்
நேர்ந்த தீங்கு ஒன்றும் உண்டு.
அது தீய கனவாதலால் அதைப்பற்றி
உன்னிடம் ஒன்றும் கூறமாட்டேன்.
அவ்வூருக்கு நேர்ந்த தீங்கு
நான் செய்த
குற்றத்தினால் உண்டானதுபோல் தெரிகின்றது;
இவ்வாறு குற்றம் புரிந்த பின்னும்
நானும் என் கணவரும் பெருநன்மை அடைந்தோம்.
அதைக் கேட்டால் உனக்குச் சிரிப்பு கூட வரலாம்…
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 40 – 54
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram26.html
படத்துக்கு நன்றி:
http://www.panoramio.com/photo/33347498