“மாதவன் இளங்கோ”, தமிழகத்தின் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில், 1979 ஆம் ஆண்டு, திரு. பாரதி-திருமதி. சியாமளா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். திருப்பத்தூரில் பள்ளிக்கல்வி பயின்ற அவர், கோயமுத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி ‘இயந்திரவியல்’ துறையில் இளநிலை பட்டம் பெற்றவர். இந்திய மேலாண்மை கழகத்தில் பொது மேலாண்மையும் பயின்றவர்.
கடந்த ஐந்து வருடங்களாகத் தமிழில் சிறுகதைகளையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதிவரும் இவரது படைப்புகள் வல்லமை, சொல்வனம், திண்ணை, சிறகு, விகடன், தினமலர் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் மட்டுமின்றி, இலக்கியம், மெய்யியல், உளவியல், மற்றும் மேலாண்மையில் மிகுந்த நாட்டமுடையவர்.
வல்லமை இணைய இதழின் ‘வல்லமையாளர்’ விருது பெற்றவர். வல்லமை இணைய இதழ் – ஐக்கியா அறக்கட்டளை இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதைகளை மூத்த கலை இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களும், மூத்த எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்களும், சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுத்து மதிப்புரை வழங்கியுள்ளார்கள். திரு.வெ.சா அவர்கள், திண்ணை மற்றும் சொல்வனம் இணைய இதழ்களில் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் பற்றி எழுதிய கட்டுரைகளில் இவரது படைப்புகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். கணையாழி இலக்கிய இதழிலும் இவருடைய சிறுகதைத் தொகுப்பைப் பற்றி ‘இப்போது பெல்ஜியத்திலிருந்து ஒரு மாதவன் இளங்கோ’ என்கிற தலைப்பில் விரிவாக விமர்சனம் எழுதியுள்ளார். விக்கிபீடியாவில் இவரது பங்கு – ஆங்கில விக்கியில் தொடங்கி, தற்போது தமிழ் விக்கியில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதியும், திருத்தியும் வருவதன் மூலம் தொடர்ந்து வருகிறது. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான அம்மாவின் தேன்குழல் அகநாழிகை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
தற்போது ஐரோப்பாவில் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்சு மாநகருக்கு அருகிலுள்ள லூவன் நகரில் தன் மனைவி தேவிப்ரியா மற்றும் மகன் அம்ரிதசாயுடன் வசித்து வருகிறார். பெல்ஜியத்தின் முதன்மையான வங்கி ஒன்றில் செயல் திட்ட மேலாளர், பயிற்சியாளர், விரிவுரையாளர், தொழில்நுட்ப நிறுவன நிர்வாகி எனப் பல திறக்குகளில் இயங்கி வருகிறார். அண்மையில் ஏஜைல் சர்வதேச கூட்டமைப்பின் பெல்ஜியம் பிரிவின் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு அலவலக டீம் மீட்டிங்கிலும் இதைப்பார்க்கலாம். எனக்குப் பிடித்தவரிகள் எவை எனக் குறிப்பிட வேண்டும் என்றால் மீண்டும்உங்கள் கவிதை முழுவதையுமே இங்கு ஒத்தி ஒட்ட வேண்டியிருக்குமே!!!!! நல்லதொரு கவிதை, நன்றி இளங்கோ.
….. தேமொழி
இரைச்சல், அமைதி
அநிரந்தரம், நிரந்தரம்
ஒளிமங்கிப் போனதால்
பிறந்ததிந்த இருட்டு…
இல்லாத ஒன்றை இருப்பதாகக்
காட்டும் இந்த மாய இருட்டு….
“நிரந்தரம் எதுவோ அது அமைதியாலே பிறக்கும்…
பிற சத்தங்கள் அனைத்துமென்
செவிப்பறையை கிழித்து
செவிடனாக்கிவிட,
அத்தனை
அமைதிகளின் சத்தங்களும்
தெளிவாகக் கேட்கத்தொடங்கின..
‘அமைதியடைந்தேன் நான்’!”
முத்தாய்ப்பாய் வந்த வரிகள்
முழுமையாக்கின எந்தன் இனிமையை!
பகிர்விற்கு ன்றி!
அற்புதம், கவிஞரே!
எல்லா வரிகளும் அசத்தல். குறிப்பாகச் சொல்ல நினைத்தால்…….
எந்த மன்றத்திலும், வகுப்பறைகளிலும், மடலாடல் குழுமங்களிலும் இதை நாம் காணலாம்.
அருமை!
பணிவன்புடன்,
புவனேஷ்வர்
அருமையான கவிதை இளங்கோ. குறிப்பாக இறுதி வரிகள் முத்தாய்ப்பாக இருக்கின்றன. மொத்தத்தில் வாசிப்பவர் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தி விடுகிறது உனது அமைதிகளின் சத்தங்கள்.
படிக்கும் போதே, வரிகளினூடாக நாம் வாழ்வது முடிகிறது. தங்கள் எழுதுகோல்,கவிதை எனும் கடலில், சத்தமில்லா உணர்வலைகளை எழுப்பி, அவற்றை மனதின் கரைகளைத் தழுவி உட்புகச்செய்கிறது. இது, தங்கள் கவிதைகளின் சிறப்பியல்புகளுள் ஒன்று என நினைக்கிறேன். கவிதையின் கடைசி வரிகள் எங்கோ கொண்டு சென்று விட்டன. பாராட்ட வார்த்தைளில்லை. பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி சகோதரரே!!!
///வீண் வம்பு, வெட்டிப்பேச்சுகளுக்கிடையே
உழைப்பின் அமைதி..///
ஒவ்வொரு அலவலக டீம் மீட்டிங்கிலும் இதைப்பார்க்கலாம். எனக்குப் பிடித்தவரிகள் எவை எனக் குறிப்பிட வேண்டும் என்றால் மீண்டும்உங்கள் கவிதை முழுவதையுமே இங்கு ஒத்தி ஒட்ட வேண்டியிருக்குமே!!!!! நல்லதொரு கவிதை, நன்றி இளங்கோ.
….. தேமொழி
இரைச்சல், அமைதி
அநிரந்தரம், நிரந்தரம்
ஒளிமங்கிப் போனதால்
பிறந்ததிந்த இருட்டு…
இல்லாத ஒன்றை இருப்பதாகக்
காட்டும் இந்த மாய இருட்டு….
“நிரந்தரம் எதுவோ அது அமைதியாலே பிறக்கும்…
பிற சத்தங்கள் அனைத்துமென்
செவிப்பறையை கிழித்து
செவிடனாக்கிவிட,
அத்தனை
அமைதிகளின் சத்தங்களும்
தெளிவாகக் கேட்கத்தொடங்கின..
‘அமைதியடைந்தேன் நான்’!”
முத்தாய்ப்பாய் வந்த வரிகள்
முழுமையாக்கின எந்தன் இனிமையை!
பகிர்விற்கு ன்றி!
அற்புதம், கவிஞரே!
எல்லா வரிகளும் அசத்தல். குறிப்பாகச் சொல்ல நினைத்தால்…….
//குறைகுடங்களின் தளும்பல்களுக்கிடையே
நிறைகுடத்தின் அமைதி..//
எந்த மன்றத்திலும், வகுப்பறைகளிலும், மடலாடல் குழுமங்களிலும் இதை நாம் காணலாம்.
அருமை!
பணிவன்புடன்,
புவனேஷ்வர்
அருமையான கவிதை இளங்கோ. குறிப்பாக இறுதி வரிகள் முத்தாய்ப்பாக இருக்கின்றன. மொத்தத்தில் வாசிப்பவர் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தி விடுகிறது உனது அமைதிகளின் சத்தங்கள்.
அமைதிகளின் சத்தங்கள்
கேட்கிறது
அருமைக் கவிதையாய்…!
படிக்கும் போதே, வரிகளினூடாக நாம் வாழ்வது முடிகிறது. தங்கள் எழுதுகோல்,கவிதை எனும் கடலில், சத்தமில்லா உணர்வலைகளை எழுப்பி, அவற்றை மனதின் கரைகளைத் தழுவி உட்புகச்செய்கிறது. இது, தங்கள் கவிதைகளின் சிறப்பியல்புகளுள் ஒன்று என நினைக்கிறேன். கவிதையின் கடைசி வரிகள் எங்கோ கொண்டு சென்று விட்டன. பாராட்ட வார்த்தைளில்லை. பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி சகோதரரே!!!