புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மதுரையைச் சேர்ந்த லாப நோக்கற்ற சமூக முனைப்பு நிறுவனமான நேடிவ்லீட் பௌண்டேஷன் (Nativelead Foundation – N L F ), எஸ்.ஏ.பி லேப்ஸ் இந்தியா ( SAP Labs India) என்ற ஜெர்மனியைத் தலைமை இடமாகக் கொண்ட பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இது எஸ்.ஏ.பி லேப்ஸ்-இன் `நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புணர்வு’ (Corporate Social Responsibility) திட்டத்தின் ஓர் அங்கமாகும். இந்த உடன்படிக்கையின் படி நேடிவ்லீட்( NLF) ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் 20 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் மத்தியில் தொழில் முனைப்பு பற்றிய பலவகையான பயிற்சிகளை மேற்கொள்ளும். இதன் நோக்கம் இந்திய கண்டுபிடிப்புகள் மற்றும் தயாரிப்புகளை உலக சந்தைக்குக் கொண்டு வருவதாகும். புது யுக தொழில் முனைப்புகளை ஊக்குவிப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.
நேடிவ்லீட் நிறுவனம், பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் கல்வி முடித்த இளைஞர்கள் மத்தியில் புதிய தொழில்களில் முனைவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஊக்குவித்து அதற்கான பயிற்சிகள் மற்றும் தொடர்புளை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
அதன் மூன்று ஆண்டு திட்டத்தின்படி இப்பிராந்தியத்தில் 100 கல்லூரிகளில் பயிலும் ஒரு லட்சம் மாணவர்கள் மத்தியில் தொழில் தொடங்குதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி 50 உலக தரம்வாய்ந்த இந்திய கண்டுபிடுப்புகள் மற்றும் தயாரிப்புகளை உலக சந்தைக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளும்.
நிகழ்ச்சியில் பேசிய NLF நிறுவனத்தின் இயக்குனர் R சிவராஜா கூறியதாவது, இன்னும் சில வருடங்களில் இந்தியாவின் இளைஞர்களின் எண்ணிக்கை மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது மிக அதிகமாக இருக்கும் என கணக்கிடப் பட்டுள்ளது. இது நாட்டுக்கு ஒரு பெரிய சக்தியாக இருந்தாலும் இந்த இளைய சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது நாட்டிற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றார்.
.
அதை எதிர் கொள்வதற்கான ஒரே வழி இப்போதிருக்கும் இளைஞர்கள் மத்தியில் தொழில் முனைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைத் தொழில் தேடுபவர்கள் என்ற நிலையில் இருந்து வேலை கொடுப்பவர்கள் என்ற நிலைக்குக் கொண்டு வருவதாகும் என்றார்.
நேடிவ்லீட் நிறுவனத்தின் இத் திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் எஸ்.ஏ .பி (SAP) நிறுவனம் தனது அதிநுட்ப கண்டுபிடிப்பான எஸ் .ஏ.பி ஹானா (SAP Hana technology) தொழில் நுட்பம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதைப் பயன்படுத்தி மாணவர்கள் பல சமுதாய முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடுப்புகளை மேற்கொள்ள வழிவகுக்கிறது.
இதன்படி எஸ்.ஏ .பி (SAP ) நிறுவனத்தின் பணியாளர்கள் நேடிவ்லீட் ஒப்ந்தம் செய்திருக்கும் கல்லூரி மாணவர்களுடன் மூன்று கட்டமாக தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். அவையாவது கற்பித்தல், புதிய உத்திகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் உதவுதல் மற்றும் அத்தகைய தேர்ந்த உத்திகளின் அடிப்படையில் புதிய தொழில்களைத் தொடங்க உதவுதல் ஆகியனவாகும்.
நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ.பி யின் துணை தலைவர் மாத்யு தாமஸ் கூறும் போது எஸ்.ஏ.பி ஆனது மாணவர்களைத் தொழில்முனைவோர் ஆக்குவதை அதன் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் முக்கிய அங்கமாக கொண்டுள்ளது என்றும் அதற்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதலையும் கொடுக்க தயாராக உள்ளது என்றும் கூறினார்.
எஸ்.ஏ.பி இன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய தொழில்களைத் தொடங்க தேவையான அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் வசதியை இந்த சமூகப் பொறுப்புணர்வு திட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதே அதன் நோக்கம் ஆகும் என்றார்.
நேடிவ்லீட் உடன் ஆன ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் நாட்டில் மாணவர்கள் தொழில்முனைவோராக தேவையான ஊக்கத்தையும் வழிகாட்டுதலையும் கொடுத்து அவர்களுக்கும் நாட்டுக்கும் வளமான எதிர் காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என நம்புகிறோம் என்றார் .
நிகழ்ச்சியில் எஸ்.ஏ.பி நிறுவனத்தின் ஆசிய தலைவர் – (சமூக பொறுப்புணர்வு), திருமதி.சின், குஞ்சன் பட்டேல் மற்றும் நேடிவ்லீட் நிறுவனத்தைச் சார்ந்த அஸ்வின் தேசாய், நாகராஜா பிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர்.
என்னுடைய சில கண்டுபிடிப்புகளை தமிழக இளங்கர்களின் வளர்ச்சிக்க பயன்படுத்தலாம் என்று நினைக்கிறான் தயவு செய்து உதவவேண்டும்.