தீபமெல்லாம் ஒன்றாய் சேர்ந்த தீபாவளி வருக
தெய்வமெல்லாம் ஒன்றாய் சேர்ந்து அருளாசி தருக
விலைவாசிகளும் விஷதூசிகளும்
வரிவேசிகளும் அரசாணைகளும்
நாட்டிற்கு சாதகமாக்கும் நம்பிக்கை ஒளிதருக    (   )

எண்ணைவிலை ஏறினாலும்
விளக்கேற்றி காண்போம்
வெண்ணைவிலை ஏற்றினாலும்
முறுக்கேற்றி திண்போம்
தங்கவிலை தொங்கவைத்தாலும்
பொன்னாரம் சேர்ப்போம்
மங்களங்கள் வழங்கும் ஆட்சி
காணவகைச் செய்வோம்.  (   )
இரவுகளை பகலாய் மாற்றும்
அரசனையும் காட்டு
மரபுகளை மதிப்பாய் ஏற்கும்
அரியணையை யேற்று
உறவுகளை இனிப்பாய் மாற்றும்
இல்லற முங் கூட்டு
வரவுகளை நட்பாய் சேர்க்கும்
தமி ழியிசையை ஆற்று (   )

இதனை இசையுடன் கேட்க………http://www.youtube.com/watch?v=TvgPNm8u83o&feature=youtu.be

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *