வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 18

8

தேமொழி

வாழ்வில் எதுவும் கடந்து போகும்

depression

 

மனித மனமே கேளு
மயக்கம் என்ன கூறு
கலங்கும் நெஞ்சே ஆறு
இது வாழ்வில் காணும் பேறு

எதுவும் கடந்து போகும்
எண்ணம் கிடந்து வாட்டும்
எதையும் தாங்கும் இதயம்
எளிதில் மறந்து போகும்

 

 

கவிதை வரிகளுக்குரியவரான காவியக்கவி இனியா அவர்களுக்கு நன்றி
(http://kaviyakavi.blogspot.com/2013/09/blog-post_20.html)

 

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 18

  1. Dear Ms Themozhi

    The Colours & Execution brilliantly bring out a mood of contemplation…

    Great work!

    Rgds,

    Su.Ra

  2. எளிதில் மறக்க இயலா கவிதைக்கு
    எளிதில் மறக்க இயலா ஓவியம்..
    வாழ்த்துக்கள்…!

  3. அன்பின் தோழி தேமொழி அவர்களுக்கு….!
    மிக அருமையாக கவிதைக்கு ஏற்ப ஓவியம் வரைந்து அசத்தியிருக்கிரறீர்கள். என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மிகுந்த நன்றி ஏனைய ஓவியங்களும் பார்த்தேன் ரசித்தேன். சிவன் பார்வதி இன்னும் அழகாக இருந்தது . உங்கள் ஓவியம் என் வலை தளத்திலும் பதித்திருக்கிறேன். நேற்று வந்து கருத்திட்டேன்.அனுப்பமுடியவில்லை. திரும்பி விட்டேன். கணக்கு என் கண்ணுக்கு தெரியவில்லை.தெரியும் படியான நிறம் தீட்டவும்.
    நன்றி தொடர வாழ்த்துக்கள்…..! என் வலை ப்பக்கம் சென்று பாருங்கள் ….!

  4. ஒரு ஓவியரிடம் இருந்து பெறும் பாராட்டு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது ரவி.  இது என் முதல் அக்ரிலிக் வண்ண ஓவியம்.  

  5. ஒவியத்தைப் பாராட்டிய செண்பக ஜெகதீசன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. 

  6. எளிதில் மறக்க இயலா கவிதை என்று வல்லமைக் கவிஞர் செண்பக ஜெகதீசன் ஐயா அவர்களால் பாராட்டுப் பெற்ற கவிதையை  எழுதிய அன்பு இனியா மிக்க நன்றி.

    நீங்கள் பாராட்டும் சிவன் பார்வதி ஓவியத்தைத் தீட்டியவர் கனடாவில் வசிக்கும் திரு. ஆர்.எஸ்.மணி அவர்கள். மேலும் நீங்கள் குறிப்பிடும் தொழில் நுட்பச் சிக்கலை வல்லமை மின்னிதழின் ஆசிரியர் குழு கவனத்தில் கொள்வார்கள். உங்கள் கருத்துரைகளுக்கும் பாராட்டுகளுக்கும்  மீண்டும் நன்றி.
     

  7. நண்பர் திரு.செண்பக ஜெகதீசன் கூறியது போல கவிதையையும் ஓவியமும் ஒன்றிணைந்து, ஒன்றை ஒன்று மேம்படுத்திக் காட்டுகின்றன. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *