உமா மோகன் 

friends 2

–பிரியம் சொல்லில் தளும்பல்

உன் ப்ரியம்

கருணை கண்ணில் வழிவது

பார்வைக்கு அழகு

பார்ப்பவர்க்கு அழகா ..?

என் ஆன்மாவை

துடைத்துத் தூபம் காட்டி

இறுகப் பூட்டிவிட்டேன்

புற அழுக்கு குறித்த அச்சமென்றாய் ..

 

அழுக்கு தின்று மூச்சு விடும்

மீன் அது என்பதை அறியாயோ

அகவிழி திறந்து ஆன்மாவை

உலவவிடு…

தடாகம் முழுக்க துள்ளிப் புரண்டு

நீந்தும்போதில்

நீயும் கற்பாய் பிரியமும் கருணையும்

விரல் வழியும் வழியும் என்பதை…

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *