தமிழ் வளர்க்க ஒரு யோசனை – நீதிபதி மூ.புகழேந்தி குரல் பதிவு

சந்திப்பு: அண்ணாகண்ணன்

Justice_Mu_Pugazenthiஓய்வுபெற்ற நீதிபதி மூ.புகழேந்தி அவர்களைக் கவிஞர் புதுகை மா.உதயகுமாரும் நானும் 27.12.2013 அன்று, தாம்பரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். மூ.புகழேந்தி அவர்கள், 14 நூல்களை இயற்றியுள்ளார். கவிஞர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நாவல் எழுதியுள்ளார். சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

இவருடன் உரையாடியபோது, தமிழை வளர்க்க, ஒரு யோசனை கூறினார். பள்ளி நிலையில் தமிழை ஒரு பாடமாக வைத்துள்ளது போல், கல்லூரி அளவிலும், அதிலும் கலை – அறிவியல் கல்லூரிகள் மட்டுமல்லாது, மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட இதர கல்லூரிகளிலும் இளங்கலை மட்டுமல்லாது முதுகலை மாணவர்களுக்கும் தமிழை ஒரு பாடமாக வைக்க வேண்டும். அப்போது தமிழ் தானாக வளரும் என்றார்.

அவரது கருத்துகளை இங்கே கேளுங்கள் –

http://www.4shared.com/mp3/mnYZEaci/Pugazenthi_judge_final.html

நேர அளவு: 03.55 நிமிடங்கள்

மெல்லிசை: வசந்தி சுப்பிரமணியன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *