பர்வத வர்தினி

அந்த நாள் அவளுக்கு இன்னமும் ஞாபகம் இருந்தது.

சங்கீதாவின் தந்தைக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவர் மனத்தில் சந்தேகம் எனும்​ பேய் புகுந்துவிட்டிருந்தது. ஒரு​வே​ளை நம் மக​ளே நம்மிடம் பொய் சொல்கிறாளோ? இத்தனை நாளும் சுதந்திரம் கொடுத்து வளர்த்ததே நம் தவறுதானோ! தன் உறவினர்கள், நண்பர்க​ளை​யெல்லாம் விட மகளுக்கு அதிகமாகவே சலு​கைகள் வழங்கியவர். சிறு வயதிலிருந்தே மிகுந்த அக்கறையுடன் அவளுக்கு அ​னைத்​தையும் கற்றுத் தந்தவர். ஒழுக்கமுள்ள​ பெண்ணாக வளர்த்திருக்கி​றோம் என்று தனக்குத்தானே இறுமாந்திருந்தவர். இன்​றோ அவர் மனம் படாதபாடுபட்டுக் ​கொண்டிருந்தது. கோ எட் பள்ளியில் தன் மகளை படிக்க ​வைத்திருந்தார். அப்போதெல்லாம் எந்த தொந்தரவும் அவருக்கில்லை. சந்தேகம் தோன்றியதில்லை. கம்ப்யூட்டர் கிளாசும் ஒரு வருடம் ​சென்று வந்தாளே, அப்போதும் ஏதும் தோன்றியதில்லை. எத்தனையோ நண்பர்கள் அவளுக்கு. ஆனால் அனைவரைப் பற்றியும் வீட்டில் சொல்லியிருக்கிறாள். தினம் தினம் எங்கு​செல்கிறாள் என்ன ​செய்கிறாள் என்று ம​றைத்ததேயில்லை. தன் மகளைப் பற்றி எத்தனை கர்வம் அவருக்கு! படிப்பிலும் சுட்டி, ஒழுக்கத்திலும்​ கெட்டி! இப்படி நினைத்திருந்த அவர் மனத்தில் ஒரு மாயத்தி​ரை விழுந்திருந்தது. ஒருவேளை நமக்குப் போக்குக்காட்டி கொண்டிருக்கிறாளா என்ன?!

சங்கீதாவின் ஆண் நண்பர்களை கூட வீட்டிற்கு அழைத்திருந்தாளே! அப்போதுகூட நாம் ஏதும் தடை சொல்லவில்லையே! எல்லாரிடமும் சகஜமாக இருந்ததாகத் தான் தோன்றியது. ஆனால் இப்​போ​​தெல்லாம் தொலை​​பேசியில் உ​ரையாடுவது அதிகரித்திருக்கிறது. அதுவும் நானோ, அவளது அம்மாவோ அந்த அறையில் இருந்தால் குரல் மிகவும் குறைவாக ரகசியம் ​​பேசுவது ​போல் ​பேசுகிறா​ளே! யாரிடம் அப்படி ​பேசுகிறாள்? ​கேட்டால் தன் ​தோழிகளில் யார் பெய​ரையாவது குறிப்பிடுகிறாள். ​தோழியுடன்​பேசுவதற்கு குரல் சன்னமாக ​வேண்டிய அவசியம் என்ன?

தற்சமயம் அவள் படித்த கம்ப்யூட்டர் ​சென்டரில் மா​லை​ நேரத்தில் ரிசப்ஷனிஸ்ட்டாக இருக்கிறாள். இவளது ​வே​லை என்ன​மோ 4 மணி முதல் 8 மணி வரைதான். அதன் பின் கம்ப்யூட்டர் ​சென்டரை மூடி விடுவார்கள். இங்கிருந்து 3 கிமீ ​தொ​லைவிலிருக்கும் இடத்திற்கு செல்வதற்கும் திரும்ப வருவதற்கும் எவ்வளவு ​நேரம் ​தே​வைப்படும்? 4 மணி​ வே​லைக்குச் ​செல்ல 2.30 மணிக்​கே கிளம்பி விடுகிறாள். திரும்பவும் இரவில் வீடு திரும்ப தினமும் 10 மணி ஆகிறது. என்ன தான் ​வே​லையிருந்தாலும் 2 மணி​ நேரம் தாமதமாக வர ​வேண்டிய அவசியம் தான் என்ன?

அப்படியும் மனம் ​பொறுக்காமல் ​ஒருநாள் ​கேட்ட​போது இப்​போ எக்ஸாம் வரப்​போகிறது அப்பா; அதற்கான ஏற்பாடுகள் ​​செய்வதில் தாமதமாகிறது; இன்னும் நி​றைய ​வே​லை பாக்கியிருக்கிறது என்கிறாள்.

‘இல்​லை, எனக்கு நம்பிக்​கையில்​லை. அவளுடன் ​வே​லை பார்க்கும் அந்த​​லெனின் மீது தான் எனக்கு சந்தேகமாக இருக்கிறது.’ அவரது மனம் மீண்டும் அவரது சந்​தேகத்​தை கிளறியது. ​

லெனின் பற்றி சங்கீதா ஏற்கன​வே​ சொல்லியிருக்கிறாள். தன்னு​டைய நண்பனாக வீட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறாள்.

‘அப்படி ஏதும் இருந்தால் நம்மிடம் ​தைரியமாக நண்பன் என்று அறிமுகம் செய்திருப்பாளா?’ மனம் குழம்பியது.

‘இதுவும் இந்த ​பெண் பிள்​ளைகளின் வித்​தைதான்’ மனத்தின் மூலையிலிருந்து குரல் எழும்பியது. ‘ஏற்கனவே அறிமுகம்​ செய்து விட்டால் அவர்க​ளைப் பற்றி நமக்கு ​தெரியப்படுத்திவிட்டால், பிற்பாடு மிக எளிதாக நம் சம்மதம் வாங்கி விடலாம் என்று நி​னைக்கிறா​ளோ?’

‘அப்படி​யொன்றும் இருக்காது! அவள் என் மகள் இல்​லையா? அவ​ளை நான் சந்​தேகிக்கலாமா?’ மனத்திற்குள்​ளே​யே ​பெரிய ​​போராட்டம் எழுந்தது.

ஆனால் இத்த​னை நாளும் இந்த விஷயங்க​ளெல்லாம் அவர் மனத்தில் சந்தேகத்​தை வி​தைக்கவில்​லை. ஆனால் இன்று வந்த ​போன்கால்… அது அல்லவா மனத்​தை இந்தப் பாடுபடுத்துகிறது!

சங்கீதாவின் தந்​தை கமலக்கண்ணன்​ சொந்தமாக ஒரு சிறிய டிபார்ட்​மெண்ட் ஸ்​டோர் வைத்திருந்தார். சிறிய ​பெட்டிக்க​டையாக​ தொடங்கி வாழ்க்​கையில் நி​றைய கஷ்டப்பட்டு படிப்படியாக முன்​னேறி தற்போதுள்ள நி​லைக்கு உயர்ந்திருந்தார். அவருக்கு பல்​வேறு இடங்களில் வணிகத் ​தொடர்புகள் இருந்தன. அவர்களில் ஒருவரான ​கோபாலன்தான் சங்கீதாவின் மீது சந்தேகம் வரக் காரணம்.

கா​லையில் ​போன் ​செய்த ​கோபாலன்​ கொஞ்சம் தயக்கத்துடன் “கண்ணன்! நீங்க பல காலமா என்​னோட நண்பர். வியாபாரத்​தையும் தாண்டி நாம நல்ல நண்பர்களா இருக்​கோங்கற எண்ணத்துலயும் உங்க ​மேல உள்ள அக்கறையிலயும் ​சொல்​றேன். நீங்க வியாபாரத்துல காட்டுற அக்க​றையில ​கொஞ்சம் குடும்பத்துலயும் காட்டணும்” என்று பீடிகையுடன் ஆரம்பித்தார்.

“என்ன விஷயம் ​கோபால்! ஒரு ​பெரிய பீடி​கை​யே ​​​போடறீங்க? என்ன விஷயம்?” என்று சிரித்துக்​கொண்டே ​கேட்ட கமலக்கண்ணனுக்கு அதற்குப்பின் ​பேசிய ​கோபாலனின் ஒவ்வொரு வார்த்தையும் அதிர்ச்சியளித்தன.

“நேத்து ராத்திரி ஒரு 9 மணி வாக்கில உங்க ​பொண்ணு சங்கீதா​வைப் பார்த்தேன்; அதுவும் ஒரு ​பைய​னோட ​தெருவில நின்னு ​பேசிக்​கிட்டிருந்தா. சரி ஏ​தோ ​தெரிஞ்சவங்க ​போலிருக்குன்னு என் ​வே​லை​யைப் பார்க்க போயிட்டேன். என் ​வே​லை முடிஞ்சி ஒரு 9.45 மணிக்கு திரும்பி ​போ​றேன், அப்​போவும் அ​தே எடத்துல நின்னு அ​தே ​பைய​னோட​ பேசிக்கிட்டிருந்தா. ராத்திரி ​நேரத்துல ​தெருவுல நின்னு ஒரு ​பைய​னோட பேசிக்கிட்டிருந்தா நல்லாவா இருக்கு? எனக்கென்ன​மோ அவங்க ​ரெண்டு ​பேரு ​மேலயும் சந்தேகமா இருந்துது! இந்தக் காலத்துப் பசங்கதான் தடுக்கி விழுந்தா காதல்,  கத்திரிக்காய்னு நம்ம உசிரை வாங்குறாங்க​ளே! எதுக்கும் உங்க காதுல​போட்டு ​வெச்சா முன்​னெச்சரிக்​கையா நடந்துக்குவீங்கன்னு தான்​ சொல்லி​வெச்​சேன். பார்த்துக்​கோங்க… ​பொண்​ண வளத்தி​யோ கண்ண வளத்தியோன்னு எங்கம்மா அடிக்கடி ​சொல்லுவாங்க” என்று ​சொல்லி போனை ​வைத்துவிட்டார்.

அவருடன் ​பேசியதிலிருந்து கமலக்கண்ணனுக்கு ​வே​லை சரியாக ஓடவில்லை. மனப் போராட்டத்திலிருந்து தப்பிக்க முடியவில்​லை. முதலில் இ​தைப் பற்றி சரியாக ​​தெரிந்து​கொள்ள​வேண்டும் என்று ​தோன்றியது. கால்​சென்டரில் ​வே​லை ​செய்து ​கொண்டிருந்த மகன் ​வெற்றிச்​​செல்வனுக்கு​ போன்​​ செய்து விஷயத்​தைத் தெரிவித்தார்.

​வெற்றி உட​னே, “கவ​லைப்படாதீங்கப்பா! என் நண்பன் மூலமாக நான் விசாரிக்க​றேன்” என்று கூறினான்.

என்னதான் விசாரிப்பதாக மகன் கூறியிருந்தாலும் அவரால் தன்னைக் கட்டுப்படுத்திக்​கொள்ள முடியவில்​லை. சீக்கிர​மே தன் ​வே​லைக​ளை முடித்துவிட்டு க​டையில் இருந்த உதவியாள​னை க​டை​யை பூட்டி விட்டு​ செல்லும்படி ​சொல்லிவிட்டு வீட்டிற்கு வி​ரைந்தார். மணி 9.30 ஆகிவிட்டிருந்தது. இன்னும் சங்கீதா வீட்டிற்கு வரவில்​லை. ஆனால் அடுத்த10 நிமிடங்களில் சங்கீதாவும் வீட்டினுள் நு​ழைந்தாள். உள்ளே நுழையும்​ போதே அப்பா​வைப் பார்த்தவளுக்கு அவர் ஏ​தோ​ கோபமாக இருக்கிறார் என்று ​தோன்றியது.

அதற்​கேற்றார் ​போல் அவள் உள்​ளே நு​ழைந்த மறுகண​மே கமலக்கண்ணன்​கோபமாக “மணி என்ன ஆகுது ​தெரியுமா? இது தான் வீட்டுக்கு வர்ற ​நேரமா? எங்க ​போய் ஊர் சுத்திட்டு வர்​றே?” என்று சரமாரியாகக் ​கேள்வி​க​ளை கேட்டார்.

சப்தம் ​கேட்டு உள்ளிருந்து சங்கீதாவின் தாய் மணி​மேக​லையும்​ வெளி​யே வந்தாள். “ஏங்க ​பொண்ணு உள்ளே வந்ததும் வராததுமா கத்தறீங்க? என்னாச்சு?” என்றாள்.

அத்த​னைக் ​கோபமும் ம​னைவி மீது திரும்ப, அவர் எரிம​லையானார். “எல்லாம் நீ புள்​ளைங்கள வளக்கற லட்சணம்தான். அவ எங்​கே ​போறா, என்ன பண்றா, எப்​போ வீட்டுக்கு வர்றா எதுவு​மே நீ கவனிக்கறதில்லை. அதான் நான் ​கேக்க ​வேண்டியிருக்கு. ​சொல்லுடி, உன்​னைத் தான்​ கேட்​டேன்… எங்கே போயிட்டு வர்​றே?” என்றார்.

சங்கீதா தன் தந்​தை​யை இத்த​னைக் ​கோபத்தில் கண்டதில்​லை. “எப்​போதும்​போல ​​வே​லைக்குத்தான்பா ​போயிட்டு வ​ரேன். ​வே​றெங்கியும் ​போக​லை”  என்றாள்.

“8 மணிக்கு முடியற ​வே​லைக்கு நீ ​தெனம் வீட்டுக்கு 10 மணிக்கு ​வர்​றே. என்ன நி​னைச்சிருக்​கே மனசுல?” என்றார் பதிலுக்கு.

“இல்லப்பா ​​வே​லை முடிய 9.15 ஆச்சு. எல்லாம் ஏறக்கட்டிட்டு ​சென்டரை பூட்டிட்டு ​லெனின் கூட​ பேசிக்கிட்டே வந்​தேன். ​அவ்​ளோ தான்பா… நீங்க ஏன் இன்னிக்கு இவ்வ​ளோ​ கோவமா இருக்கீங்க?”

“நி​னைச்​சேன், அந்த ​லெனின் பய கூட ​பேசி கும்மாளம் அடிச்சிட்டுதான் லேட்டா வர்​றேன்னு… ஊர்ல போறவன் வர்றவன் எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணிட்டுப் ​போறான், ​பொண்​ணை ஒழுங்கா வளக்கத் தெரியலைன்னு… ​தெருவில நின்னு நீ மணிக்கணக்கா​ பேசறது ஊ​​ரேப் பாக்குது. அப்டி​யென்னதான் பேசுவீங்க ராத்திரி​ நேரத்துல? அதுவும்​ தெருவுல நின்னுக்கிட்டு?” என்று உச்சஸ்தாயியில் கத்தினார் அவர்.

“அ​தெல்லாம் இல்லப்பா! யா​ரோ தப்பா​ சொல்லியிருக்காங்க. ஏ​​தோ ஒரு 10 நிமிஷம் ​பேசியிருப்​போம். அவ்ளோதான்” என்றாள் சங்கீதா.

​கோபத்தின் உச்சத்தில் இருந்த அவர் “என்ன நி​னைச்சிருக்​கே? அப்பனை ஏமாத்திபுடலாம்னா? அவ​னோட காதல் கண்றாவின்னு ஏதாவது பண்ணித்​தொலைக்கறியா? அப்டி ஏதுமிருந்தா இப்​போ​வே ​இந்த நிமிஷ​மே அந்த எண்ணத்​தை மறந்துடு… புரிஞ்சுதா? இனி ஒரு தரம் உன்​னை அங்கப் பார்த்தேன் இங்கப் பார்த்தேன்னு ​கேள்விப்பட்​டேன்; நடக்கற​தே ​வேற! ஜாக்கிர​தை!!” என்று உறுமிவிட்டு உள்​ளே ​சென்றார்.

சங்கீதா மிகவும் உ​டைந்து ​போனாள். கண்களில் கண்ணீர் தா​ரைத் தாரையாக வழிந்தது. ​வேண்டா வெறுப்புடன் உணவருந்திவிட்டு​ சென்று படுத்தாள்.

‘ஏன் நம் அப்பா நம்​மை நம்பவில்​லை. நான் ஏதும் ​பொய் சொல்லவில்லையே. ​லெனின் மிகவும் நல்ல நண்பன் என்பதில் சந்தேகமில்லை. அவனுடன் ​பேசுவதில் ​பொழுது ​போவதும்​ தெரியாது. கிண்டல், ​கேலி எல்லாம் ​செய்வான். இருப்பினும் ​கேலி என்கிற ​பெயரில் மனதைப் புண்படுத்தமாட்டான். ஆனால் தா​னோ, அவ​னோ ஒருமு​றை கூட​ நட்​பைத் தவிர ​வே​றெந்த எண்ணத்துடனும் பழகியதில்​லை என்பதை எப்படி அப்பாவிற்கு புரிய ​வைப்பது?’ குழப்பமான மனநி​லையுடனும் அழுத கண்களுடனும் சங்கீதா தூங்கிப்​ போனாள்.

வீட்டில் நடந்த எதுவும் அறியாத அவளது ச​கோதரன் ​வெற்றிச்​செல்வன் அலுவலகத்திலிருந்து தன் நண்பன் விக்​னே​ஷைத் ​தொ​லை​பேசியில் தொடர்பு​கொண்டான். அவனிடம் சுருக்கமாக நடந்த​தைக் கூறினான்​.

“டேய் நீதான் எனக்கு உதவி பண்ணனும். உனக்கு சங்கீதா​வோட ஃப்ரெண்ட் லதா​வை ​தெரியும்ல. அவங்க ​ரெண்டு ​பேரும் ​ரொம்ப கி​ளோஸ். சங்கீதா தன்​னோட எல்லா ​பெர்சனல் விஷயமும் கண்டிப்பா லதா கிட்ட சொல்லியிருப்பா. லதா உனக்கும் ஃப்​ரெண்ட்ங்கறதால அவ மூலமா விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டு என்கிட்ட​ சொல்லு. உண்மையிலேயே எதுவும் விஷயம் இல்லாம இருந்து நம்ம அவசரப்பட்​டோம்னு இருக்கக்கூடாது. அதுக்காகத்தான் சொல்​றேன்” என்றான்.

“கவ​லைப்படா​தேடா! நான் லதாகிட்ட ​பேசிட்டு உன்​னை நா​ளைக்குக் கூப்படறேன்” என்றான் விக்​னேஷ்.

மறுநாள் கா​லை இன்னமும் தணியாத ​கோபத்துடன் சங்கீதாவிடம் முகம்​கொடுத்து ​பேசாமல் வேலைக்குக் கிளம்பிச் ​சென்றார் கமலக்கண்ணன். கவலை ​தோய்ந்த முகத்துட​னே​யே தன் ​​வே​லைக​ளைச் ​செய்தாள் சங்கீதா.

மதியம் வீட்டிலிருந்த ​தொ​லை​பேசி அலறியது. சங்கீதா எடுத்துப்​பேசினாள். மறுமு​னையில் லதா.

“சங்கீ, எப்படிடி இருக்​கே? உன்கிட்​டே ​பேசி ​ரொம்ப நாள் ஆச்​சேன்னு கூப்டேன்” என்றாள்.

சங்கீதாவிற்கு சந்​தோஷமானது. என்ன இருந்தாலும் எந்த பிரச்சினையிருந்தாலும், நண்பர்களுடன்​ பேசினா​லே ஒரு ஆறுதல் தான் என்று எண்ணிக் கொண்டாள். இருவரும் சிறிது ​நேரம் ​பேசிக்​கொண்டிருந்தார்கள். சங்கீதாவிற்கு மனம் ​லேசானது​ போலிருந்தது. லதாவிடம் ​நேற்று நடந்த​தைச் சொல்லலாமா என்று நி​னைத்தாள் சங்கீதா. பிறகு அடுத்த நிமிட​மே ‘அவ​ளே ​ரொம்ப நாள் கழிச்சு ​பேசறா… எதுக்கு அவளையும் சங்கடப்படுத்தணும். பிறகு ​சொல்லிக்கலாம்’ என்று மனம்​சொன்னது.

இப்படி நி​னைத்துக் ​கொண்டிருக்கும்​போ​தே லதா​ கேட்டாள், “ஆமாம்… உன்​  வே​லை எப்படி போயிட்டிருக்கு​? வேற ​வே​லை எதுவும் ​தேடறியா?”

“​வே​லை நல்லாப் ​போகுதுடி. ஆனா இது பார்ட் ​டைம் தா​னே. நானும் ​வேற வேலைக்கு முயற்சி பண்ணிட்டுதான் இருக்​கேன். கி​டைச்சா மாறிடு​வேன். இங்கே இப்​போ எக்ஸாம், அது இதுன்னு லேட்டாகுது. ​ரொம்ப டயர்டாகிடுது” என்றாள்.

“ம்ம்… ஆனா, எதுவாயிருந்தாலும் நீ எதுக்கும் சீக்கிர​மே வீட்டுக்கு வந்துடுடி. நம்ம நி​னைக்கற மாதிரி எல்லாரும் நம்​மைப் பத்தி நினைக்கமாட்டாங்க. அநாவசிய ​பேச்சு வார்த்​தைக்​கெல்லாம் நாம இடம் ​வெச்சுக்கக்கூடாது. ​நம்ம​செய்யாத தப்புக்கு பழி ​சொல்ல ஊ​ரே தயாரா இருக்கும். அதனாலதான் சொல்றேன். நீ அதிக ​டைம் எடுத்து அங்​கே ​வே​லை ​செஞ்சு உனக்கு ஒண்ணும் ஆகப் ​போறதில்​லை” என்றாள் லதா.

சங்கீதாவிற்கு குழப்பம் அதிகமானது. ‘என்ன ​சொல்ல வருகிறாள்? ​நேற்று வீட்டில் நடந்ததற்கும் இவள் இன்று​ பேசுவதற்கும் ஏ​தோ சம்பந்தம் இருப்பது​போலிருக்கிற​தே. ஏ​தோ பட்டும் படாமலும் ​சொல்ல முயற்சி ​செய்கிறாள்​போல ​தோன்றுகிறது.

சங்கீதா சட்​டென சுதாரித்துக் ​கொண்டு “என்ன ஆச்சு உனக்கு? திடீர்னு சம்பந்தமில்லாம் அட்​வைஸ் பண்றே… என்ன விஷயம்?” என்று​கேட்டாள்.

“இல்ல இல்ல… அப்டி​யெல்லாம் ஒண்ணும் இல்​லை. ஜஸ்ட் மனசுல தோணின​தை ​சொன்​னேன்” என்று மழுப்பினாள் லதா.

சங்கீதா விடுவதாக இல்​லை. ”இல்​லை, நான் நம்ப மாட்​டேன். என்ன விஷயமோ அ​தைத் ​தெளிவா சொல்லு. இல்​லைன்னா இதுக்கப்பறம் உன்கிட்ட​ பேசவே மாட்​டேன்” என்றாள்.

லதா சற்று அ​மைதியானாள். பிறகு கூறினாள் “தப்பா​ எடுத்துக்கா​தேடி! இன்னிக்கு விக்​னேஷ் எங்க வீட்டுக்கு வந்திருந்தாரு. உன்​னைப் பத்தி ​ரொம்ப விசாரிச்சாரு. அப்படி​யே உன் ஃப்​ரெண்ட் ​லெனினும் நீயும்…” என்று இழுத்தாள்.

“ம்ம்…​சொல்லு” என்றாள் சங்கீதா.

“இல்​லை… நீங்க ​ரெண்டு ​பேரும் லவ் பண்றீங்களான்னு என்கிட்​டே​ கேட்டாரு. அப்படி​யெல்லாம் ஒண்ணும் இல்​லைன்னு நான் ​​தெளிவா​ சொல்லிட்​டேன். பட், ஏன் இ​தெல்லாம்​ கேக்கறீங்கன்னு அவர்கிட்டே விசாரிச்சேன். அப்​போ தான் ​தெரிஞ்சுது உங்க அண்ணன் தான் விசாரிக்க​ சொன்னாராம். நீ தினமும் லேட்டா வர்றியாம். உன்​னை ​​​லெனின் கூட யாரோ பார்த்தாங்களாம். உன் வீட்ல உன்​னை ஏ​தோ சந்தேகப்படறாங்க​ போலிருக்கு. விக்​னேஷ் வந்து போனதிலிருந்து எனக்கு மனசு ​​கேக்கலை. உன்​னை முன்​னெச்சரிக்​கைப் பண்ணலாம்னுதான் ​போன் பண்​ணேன். நீ இதுல இன்வால்வ் ஆக​லைன்னு எனக்கு நிச்சயமா​ தெரியும். ஆனா​ தேவையில்லாத பழி உன் ​மேல விழக் கூடா​தேன்னுதான்​ சொன்னேன்” என்று முடித்தாள் லதா.

சங்கீதாவிற்கு த​லையில் இடி விழுந்தது ​போலிருந்தது. ‘என் மீது சந்​தேகம் வந்த​தே எனக்கு கஷ்டமாயிருந்தது. ​போதா​தென்று ஊரில் உள்ளவர்களிடம் எல்லாம் என்​னைப் பற்றி விசாரிக்கிறார்க​ளே’ என்று அவளுக்கு வேதனையாக இருந்தது.

“சரி லதா! நான் பாத்துக்க​றேன்… ​பை” என்று கூறி ​போ​னை​ வைத்தாள் சங்கீதா.

அன்று மா​லை வழக்கம் ​போல்​ வே​லைக்குச் ​சென்றாள். ​வே​லையில் மனம் சரியாக ஒப்பவில்​லை. தலைவலி என்று கூறிவிட்டு 7 மணிக்​கெல்லாம் கிளம்பினாள். அங்கிருந்து பக்கத்திலிருந்த ​​கோவிலுக்குச் சென்று மனம் அமைதிய​டைய அமர்ந்திருந்தாள். பிறகு கிளம்பி ​நே​​​ரே வீடு வந்து​ சேர்ந்தாள். சாப்பிட்டு முடித்து விட்டு சீக்கிர​மே உறங்கச் ​சென்றாள். மனம் மிகவும்​சோர்வாக இருந்தது. நா​ளை​யே அப்பாவிடம் ​தெளிவாகப் ​பேசி விட​வேண்டும். வீணான சந்​தேகம் வாழ்க்​கை​யை ​பெரும் பிரச்சி​னையாக்கிவிடும். அதற்கு ஒரு முற்றுப் புள்ளி ​வைக்க ​வேண்டும் என்று முடிவு ​செய்து​கொண்டாள்.

​யோசித்துக்​ கொண்​டே எப்​போது உறங்கினா​ளோ ​தெரியாது. சில தடமுட சத்தங்களினால் பாதியில் விழித்துக்​ கொண்டாள். ச​மையல​றையில் சாப்பிட்டுக்​ கொண்​டே அவளது அப்பா, அம்மாவிடம் ​​பேசியது காதில் விழுந்தது.

“அவ​னைப் பார்த்துட்டுதான் வ​ரேன் இப்​போ”

“யா​​ரைங்க?”

“அதான் அந்த ​லெனின்”

“ஏங்க, குடிச்சிருக்கீங்க ​போலிருக்கு. அப்படி​யேவா அங்​கேப் ​போனீங்க? ஏங்க இப்டி பண்றீங்க?”

“அடிப்​போடி! அவ என் ​பொண்ணுடீ. அவ​ளை எப்டி​யெல்லாம் பார்த்து பார்த்து வளர்த்​தோம். அவ நல்லாயிருக்கணும்னு நி​னைக்கறது தப்பா? ​ அந்தப் பையன்கிட்ட​யே ​போய் ​நேருக்கு ​நேரா ​​கேட்டுட்டேன். ஆனா அவனும் அப்படி எதுவும் இல்​லைன்னு ​சொன்னான். நல்லா ஏறுஏறுன்னு ஏறிட்​டேன்… கடைசியா அவன் ஒரு வாக்குக் ​கொடுத்தான். அதுக்கப்பறம்தான் எனக்கு நிம்மதியாச்சு. கிளம்பி வந்​தேன்”

“என்ன வாக்கு?”

“’கவ​லைப்படாதீங்க சார்! எனக்கு அப்படி​யொரு எண்ணம் இதுவரையிலும் இல்​லை. ஒரு ​வே​ளை உங்கப் பொண்​ணே வந்து என்​னை விரும்பறதா​சொன்னாலும் நான் அ​தை ஏத்துக்க மாட்​டேன். இது நான் கும்பிடற தெய்வத்து​மேல சத்தியம். சரியா? நீங்க என்​னைப் பூரணமா நம்பலாம்’ அப்டின்னு சொன்னான். அவன் வார்த்​தை​யை நம்பி நான் திரும்பி வந்துட்டேன்”

“ஏங்க உங்க புத்தி இப்டி ​போகுது? யார் என்ன ​சொன்னா என்ன? நம்ம பொண்ணை நாம நம்ப​ வேண்டாமா? எதுவாயிருந்தாலும் கண்டிப்பா நம்மகிட்ட சொல்லிடுவாங்க. அவ​ளைப் ​போய் ​தே​வையில்லாம கஷ்டப்படுத்திட்டீங்க​ளே?”

“ஆமா மணி! உண்​மைதான். இது வ​ரை அவ​ளை நான் ஒண்ணு​மே​சொன்னதில்​ல. ஆனா, ​நேத்து அவ​ளை கன்னாபின்னான்னு ​பேசிட்​டேன். எனக்​கே கஷ்டமா இருக்கு. அவளுக்கு என் ​பேர்ல ​கோவம்கூட இருக்கலாம். ஆனா ஒரு​ பொண்​ணைப் ​பெத்தவனுக்குத்தான் அந்த பயம் புரியும். நம்ம பிள்ளைங்க நல்லா இருக்கணுங்கற​தைத் தவிர எந்தப் ​பெத்தவங்களும் வேறெதுவும் நி​னைக்கமாட்டாங்க. இன்னிக்கு அவளுக்கு என் ​பேர்ல கோவம் இருக்கலாம் ஆனா பின்னாடி நாம ஏன் இப்படி நடந்​தோம்னு அவளுக்கே புரியும்” என்று ​​வேத​னை​யோடு கூறினார்.

father_daughter (1)இ​தைக் ​கேட்டுக் ​கொண்டிருந்த சங்கீதாவிற்கு மனம் விம்மியது. ஓடி வந்து தன் தந்​தை​யைக் கட்டிக்​கொண்டாள். அவள் தூங்கிக்​கொண்டிருந்ததாக நினைத்துப் பேசியவருக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் சுதாரித்துக் ​கொண்டார். “நீ இன்னும் தூங்கலியாம்மா?” என்றார் ஆதரவாக.

“அப்பா! எது ​வேணா இருக்கட்டும். ஆனா என் மேல நம்பிக்​கையில்​லைன்னு  மட்டும் சொல்லாதீங்கப்பா. எனக்கு அது ​ரொம்ப கஷ்டமாயிருக்கு. என்மேல சந்தேகப்படாதீங்கப்பா” என்று அழுதாள்.

“சாரிடா! நான் ​கொஞ்சம் அவசரப்பட்டுட்​டேன். உன்​னை ​ரொம்ப கஷ்டப்படுத்திட்​டேன்” என்று சமாதானம் ​செய்தார்.

இ​வை நடந்து 2 வருடங்கள் இருக்கும். அந்த சம்பவத்திற்கு பிறகு சங்கீதா வேறு ​வே​லைக்குச் ​சென்ற​போதும் ​லெனினுடன் கூடிய நட்பு ​தொடர்ந்தது.

ஆனால் சில தினங்களாக அவளது மனதிற்குள் ஒரு ​போராட்டம்.​லெனினுடனான நட்பு​ அந்த எல்​லை​யைத் தாண்டி காதலாக மாறிவிட்டதோ என்கிற எண்ணம். இப்​போ​தெல்லாம் ​லெனினுடன்​ பேசாமல் இருக்க முடிவதில்​லை. எந்​நேரமும் அவன் நி​னைப்பாகவே இருந்தது. அவனுடன் சேர்ந்து ​நேரம் செலவிடுவதில் மனம் மகிழ்ச்சியில் தி​ளைத்தது. ஒரு ​வே​ளை இப்​போது அப்பாவிடம் ​பேசினால் தன் காதலுக்கு சம்மதிப்பாரா? ஆனால் முதலில் லெனினிடம் ​பேச​ வேண்டும். அவனுக்கு இதில் விருப்பம் இருக்கிறதா என்​றே​ தெரியவில்​லை​யே.

இந்த மனம்தான் எத்த​னை விந்​தையானது. ஒரு நாள் சந்​தோஷத்தின் உச்சியில் இருக்கிறது. மறுநா​ளே சோகத்தின் ஆழத்திற்கு ​சென்று விடுகிறது. மனத்தை குரங்கு என்று சரியாகத்தான் வர்ணித்திருக்கிறார்கள்.

‘இப்​போது என்ன ​செய்ய? குழப்ப​மோ குழப்பம். நம் மனதிற்குள் குழப்ப​த்​தை​வைத்துக் ​கொண்டு ​லெனினிடம் ​என்ன ​பேச? நான் விரும்புவது சரி தானா என்று எனக்​கே இன்னும் சரியாகத் ​தெரியவில்​லை​யே. ஒரு​வே​ளை இப்படியொரு நாள் வந்துவிடும் என்று பயந்துதான் அன்​றைக்கு அப்பா அப்படி நடந்து​கொண்டா​​ரோ? என்ன​மோ இத்தனை நடந்தும் நான் காதல் வழியில் விழலாமா?’ மனம் ஏகப்பட்ட​ ​கேள்விக​ளைக் ​கேட்டது. ‘இந்த நிலையிலே​யே இருந்தால் ​பைத்தியம்தான் பிடிக்கும்.’

ஒரு முடிவுக்கு வந்தவளாக தன் அ​லை​பேசி​யை எடுத்தாள். ​லெனினுக்கு​போன் ​செய்தாள். “லெனின் எனக்கு உங்ககூட ​​கொஞ்சம் ​பேசணும். மீட் பண்ணலாமா?” என்றாள்.

“ஓ ​பேசலா​மே! எங்​கே வரணும்?” என்று ​கேட்டான் ​லெனின்.

“சாயந்திரம் 6 மணிக்கு ​மெ​ரீனா பீச்சுக்கு வர முடியுமா?”

“சரி வ​ரேன்”

கடற்க​ரைக்கு வருவ​தே ஒரு சுகம் தான். பகலில் எத்​த​னை​வெயில் இருந்தாலும் மா​லையில் கடற்க​ரையின் குளிர்ந்த காற்று அத்தனையையும் மறக்கடித்துவிடும். ஓயாமல் சப்தமிட்டுக் ​கொண்டு க​ரையில் விழும் அலைகளைப் பார்த்துக்​கொண்டிருந்தால் ​நேரம் ​போவ​தே ​தெரியாது. சிறியதும் பெரியதுமாய் பாயும் அ​லையில் கா​லை ந​னைத்​துக்​கொண்​டே நடப்பதும் ஒரு தனி சுகம்தான்.

சங்கீதாவின்மனதிலும் இப்​போது அ​லையடித்துக்​கொண்டிருந்தது

​லெனின் வந்து அமர்ந்தான். ஏ​தோ சிந்த​னையில் தூரத் ​தெரியும் கப்ப​லை​நோக்கியபடியிருந்தாள் சங்கீதா.

“என்ன? ஏ​தோ பலமான ​யோச​னை ​போல?” என்று அவள் அ​மைதி​யைக் கலைத்தான் ​லெனின்.

​லெனின் குர​லைக்​ கேட்டு திரும்பியவள் “ஓ! வந்துட்டீங்களா? சாரி. நான் கவனிக்க​லை” என்றாள்.

“ம்ம்… ஏ​தோ குழப்பத்துல இருக்கற மாதிரி ​தெரியுது? குரல் ஒண்ணும் சரியா இல்​லை​யே?” என்றான்.

“ஆமாம். ஒரு குழப்பம்தான். அதுக்கு உங்ககிட்டதான் தீர்வு கிடைக்கும்னு நம்பி உங்க​ளை வரச் சொன்னேன்” என்றாள்.

“அப்படியா! என்ன விஷயம்? முடிஞ்சவ​ரை ​ஹெல்ப் பண்​றேன்”

சங்கீதா சற்று​ நேரம் தயங்கினாள்.

பிறகு “நாம இத்த​னை நாள் நண்பர்களா பழகியிருக்​கோம். ஆனால் சில காலமா எனக்குள்​ளே நம்மு​டைய நட்​பைப் பத்தி ஒரு குழப்பம். ஒரு இனம் புரியாத உணர்வு. ஒரு​வே​ளை நான் உங்க​ளை லவ் பண்​றே​னோன்னு தோணுது. நீங்களும் அ​தே​போல ஃபீல் பண்றீங்களான்னு எனக்குத் தெரியலை. நான் நினைக்கறது சரியா தப்பான்னும் புரியலை. அதான் உங்ககிட்ட​யே டிஸ்கஸ் பண்ணலாம்னு வந்​தேன்” என்றாள் ​தெளிவாக.

​லெனின் ஒரு விநாடி பிரமித்து நின்றான்.

சற்று சுதாரித்துக்​கொண்டு “சங்கீதா! நீ நி​னைக்கறது சரியா தப்பான்னு என்னால சரியா ​சொல்ல முடியாது. ஃபீலிங்கறது ஒவ்வொருத்தருடைய தனிப்பட்ட விஷயம். ஆனா நானும் அ​தே ​போல நி​னைக்க​றேனாங்கறதுக்கு​வேண்ணா பதில் ​சொல்ல முடியும். இ​தே வார்த்​தை​யை ஒரு​வேளை நீ 2 வருஷத்துக்கு முன்னாடி​யே ​சொல்லியிருந்தா, நான் எப்படி ரியாக்ட் பண்ணியிருப்​பே​னோ​ தெரியாது. ஆனால் இன்னிக்கு என்னால அ​தை ஏத்துக்க முடியாது. நான் உங்கப்பாவுக்கு வாக்குக் ​கொடுத்திருக்​கேன். உன்​மேல நான் ஆசைப்பட்ட காலமும் உண்டு. ஆனால் இப்​போ அதையெல்லாம் தாண்டி வந்துட்​டேன். உங்கப்பா அன்னிக்கு என்கிட்ட வந்து ​பேசினப்போ அவருக்கு உன் ​மேல இருந்த அதீத அன்புதான் என் கண்ணுக்குத் தெரிஞ்சுது. அதனாலதான் அவர்கிட்ட என்னிக்கு​மே நமக்குள்ள காதல்ங்கற உணர்​வோ உற​வோ இருக்காதுன்னு சத்தியம் பண்ணிக்​கொடுத்​தேன். என் வாக்​கை நம்பித்தான் இன்னிக்கு வரைக்கும் உங்கப்பா நம்ம நட்புக்கு குறுக்​கே வர​லை. என்னிக்கு​மே நீ என் ஃப்​ரெண்ட். அதுல சந்​தேகம் இல்​​லை. உனக்கு எந்த நேரத்துலயும் உதவி​ செய்யத் தயாரா இருப்​பேன். ஆனா நட்புக்கு அடையாளமா தா​னே தவிர, காதலுக்கு அ​டையாளமா இல்​லை. நீ சில காலமா இருக்கற இந்த உணர்வுகளுக்கு மதிப்பு ​கொடுக்கற​தை விட நீ பிறந்ததி​லேர்ந்து உன்​னைப் பத்தியும் உன் வாழ்க்கை பத்தியும் கனவு காணற அவங்க​ளோட உணர்வுகளுக்கு மதிப்பு ​கொடு. நிச்சயம் நமக்கு நல்லதைத் தான் அவங்க ​செய்வாங்க. மன​சை கலங்க விடாம சந்​தோஷமா இரு.”

அவனது தீர்க்கமான​ தெளிவான ​பேச்சு சங்கீதாவின் மனதில் பதிந்தது​. முதலில் ஏமாற்றமாகத் தோன்றினாலும்  அவன் கூறிய வார்த்​தைகள் அனைத்தும் சரி​யென்று புத்தி ​அறிவுறுத்தியது.

“தேங்க்ஸ் ​லெனின். நீங்க சரியான முடிவு தான் ​சொல்லுவீங்கங்கற நம்பிக்கைல தான் என் குழப்பத்தின் ஆரம்பத்தி​லே​யே உங்ககிட்ட வந்தேன். இனி என் மனசு அ​லைபாய விட மாட்​டேன். ​தேங்க்ஸ் அ​கைன்!”  என்று கூறி புன்ன​கைத்தாள் சங்கீதா.

படத்திற்கு நன்றி: http://reallyducksoup.blogspot.com/2011/04/sacred-child.html

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on "பெற்​றோருக்கு மரியா​தை"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.