செண்பக ஜெகதீசன் 
சென்ற ஆண்டின் சேதாரங்கள்
சேர வேண்டாம் மனதினிலே,
வென்ற நல்ல வேளையையே
வைத்திடு மனதில் நிலையாக,
இன்று புதிதாய்ப் பிறந்தோமெனும்
இளசைப் பாரதி வாக்கினைப்போல்
என்றும் வாழ்ந்தே வென்றிடுவோம்
என்றே வாழ்த்திடு புத்தாண்டிலே…!
படத்துக்கு நன்றி
http://spoonful.com/printables/mickey-minnies-new-year-celebration-banner
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…