எங்கு சென்று கொண்டிருக்கிறோம்?
சு. கோபாலன்
பெரும் செல்வம் ,பதவி, அதிகாரம் இவையெலாம் தனக்கு மட்டுமன்றி
வரும் வாரிசுகளுக்கும், தலைமுறைகளுக்கும் சேர்க்கத் துடித்திடும்
கொலை வெறி கொலை வெறி மனதிலும் மூளையிலும் புகுந்து
தலைவிரித்தாடி செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள்
பெருகி வரும் பாலியல் கொடுமைகள், வக்கிரங்கள் – அவற்றில் சருகாய்
கருகி விடும் உறவுகளின் உன்னதங்கள், புனிதங்கள், நம்பிக்கைகள்
இறையாய் போற்றத் தக்க மூத்தோர், ஆசிரியர், மருத்துவர், நீதிபதிகள்- காமப்பசிக்கு
இரை தேடும் விலங்குகளாய் மாறிவரும் செய்திகள் கேட்கவே கூசுகிறது.
நீதி, நிர்வாகம், கல்வி, மருத்துவம் என்று அடுக்கிக்கொண்டே போகுமளவு
மீதி ஒரு துறையும் விட்டு வைக்காமல் புற்று நோயாய்ப் பரவி வரும்
லஞ்சம், ஊழல்கள் சமுதாயத்தில் புரையோடிப் போயிருப்பதைக் கண்டால்
நெஞ்சம் பதறுகிறது , கொதிக்கிறது செய்வதறியாது தவிக்கிறது.
செல்வங்களுள மிகச் சிறந்த கல்விச் செல்வம் வழங்கும் கல்வி நிறுவனங்கள்
செல்வம் குவிக்கும் சாதனங்களாய் தங்கச் சுரங்கங்களாய் மாறி வருகின்றன.
மனித உயிர் காக்கும் தொழில் என்பதால் சமூகத்திலுள்ள யாவராலும்
புனிதமாய்ப் போற்றும் மருத்துவத் துறையிலும் பணவெறி பீடித்துள்ளது.
படாடோப விருந்துகளில் பாழாய்ப் போகும் உணவு பற்றி கவலையிலா செல்வந்தர்கள்
படாதபாடு பட்டாலும் ஒருவேளை சோறு பெற இயலாது தவிக்கும் ஏழை மக்கள்
தாகம் தீர்க்கும் நீர், பசி போக்கும் உணவு, நோய் தீர்க்கும் மருந்து எதுவாயிருந்தாலும்
வேகம் வேகமாகச் செல்வம் சேர்க்கும் வெறியுடன் கலப்படம் செய்யும் வியாபாரிகள்
அற்ப காரணங்களுக்காகச் சற்றும் சிந்தியாது கொலை செய்திடவும்
முற்படும் கட்டுப்பாடில்லாத கோப உணர்ச்சிகளுக்கு ஆளாகும் இளவயதினர்
‘அன்னை இல்லம்’ என தன் சொந்த வீட்டிற்குப் பெருமையாக பெயர் சூட்டி
அன்னை இல்லா இல்லமாக பெற்றவளை முதியோர் இல்லம் அனுப்பிடும் பிள்ளைகள்!
படத்துக்கு நன்றி
http://old-photos.blogspot.in/2013/05/old-indian-couple.html