இவள் பாரதி

nivethitha (2)
நி​வேதிதா

நெற்றி சுருக்கி

புருவமுயர்த்தி

உதடு சுழித்து

அடித்துவிட்டதைப் போல

ஓசையின்றி

அழுகிறது

உறங்கும் குழந்தை

 

ஆழ்மனவிழிப்பில்

எழுந்துவிட்ட தாய்

தூக்கம் விரட்டி

விழித்திருக்கிறாள்

இரவெல்லாம்

அழுவதும் சிரிப்பதுமான

உறங்கும் குழந்தையை

ஆறுதல்படுத்தியும்

மகிழ்வெய்தியும்

 

=====

 

உனது

ஒவ்வொரு முடிக்குமான

இடைவெளியில்

ஊர்ந்தூர்ந்து செல்கிறேன்

புதிதாக விதைக்கப்பட்ட

காட்டொன்றில்

இருப்பதான நினைவெனக்கு

நீ துளிர்க்கும் சிறுமரம்

ஒரு காடு

பூவுலகம்

குட்டி பிரபஞ்சம்

 

======

 

உதடுகளுக்கிடையில்

நாக்கைத் துருத்தி

பால் குடிக்கும் பாவனை செய்கிறாய்

உறக்கத்தில்

 

மனம் பதறியெழுந்து

முலையிரண்டும் கசிய

ஒன்றை உன் உதட்டில் வைக்கிறேன்

சடாரெனக் கவ்வி

சப்பிக்கொண்டே உறங்குகிறாய்

 

======

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *