மக்கள் கேட்கும் கேள்வி (8)
பவள சங்கரி
தலையங்கம்
பெருமதிப்பிற்குரிய, திரு ராகுல் காந்தி, திரு நரேந்திர மோடி, திரு அரவிந்த் கேஜரிவால் அவர்களே,
ஆளும் கட்சியின் உதவித் தலைவரும், கட்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பவரான தாங்கள் பல ஆண்டுகளாக அமேதி தொகுதியின் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதியாக இருந்து வருகிறீர்கள். தேர்தல் நெருங்கி வருகின்ற இந்நாள் வரை உங்கள் தொகுதிக்காகவோ அல்லது இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவோ தாங்கள் செய்துள்ள சாதனைகள் என்று ஏதாவது இதுவரை வெளியிட்டிருக்கிறீர்களா? பாராளுமன்றத்தில் அதைப்பற்றி ஏதாவது பேசியிருக்கிறீர்களா? அடுத்த ஐந்தாண்டிற்கு உங்களுடைய கட்சி ஆளும் கட்சியாகப் பொறுப்பேற்கும்போது இதையெல்லாம் நாங்கள் செய்யப் போகிறோம் என்று இதுவரை நீங்கள் எதையும் கூறவில்லையே?
குஜராத் மாநிலத்தின் தற்போதைய முதல்வரும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளருமாகிய திரு மோடி அவர்களே, தங்களுடைய ஆட்சிக் காலத்தில் குஜராத் மாநிலம் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளதாகக் கூறியுள்ளீர்கள். ஆனால் சமீபத்தில் வெளிவந்துள்ள புள்ளி விவரங்களின்படி குஜராத் மாநிலம் பதினாறாவது இடத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சமுதாய வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி இவைகளைக் கணக்கில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இது. உங்களுடைய் இத்தனைஆண்டுகால ஆட்சியில் உங்களுடைய மாநிலத்தை 16 வது இடத்தில் வைத்துள்ள தாங்கள் நம் இந்தியாவை எப்படி முதல் இடத்திற்குக் கொண்டுவரப் போகிறீர்கள்? தேர்தல் அறிக்கைகளே ஒரு சடங்காக மாறிவிட்ட இன்றைய நிலையில் நாட்டினுடைய வளர்ச்சிக்காகத் தாங்கள் அளிக்கக்கூடிய ஆக்கப்பூர்வமானத் திட்டங்கள் என்று தெளிவாகத் தங்களால் ஏதும் அறிவிக்கப்படவில்லையே? இதற்கு என்ன காரணம்?
முன்னாள் தில்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமாகியத் தாங்கள் பல வகையில் சிறந்த செயல்பாடுகளைக் கொண்டிருந்தாலும், தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை 48 நாட்களில் உதறித் தள்ளியது சரியா? தங்களுக்கு பாரதப் பிரதமர் ஆகும் வாய்ப்பை மக்கள் அளித்தால் இதையும் தாங்கள் பாதியிலேயே விட்டுச் செல்ல மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் ? ஒரு சிறந்த நிர்வாகியாக, பிரச்சனைகளை எதிர்கொண்டு நிலைத்து நின்று ஆட்சி செய்யாமல் நீங்கள் பதவியை விட்டு விலகியது சரியா?
பாரதப் பிரதமர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் தேர்தல் களத்தில் பணியாற்றும் தங்கள் மூவரிடமும் மக்கள் கேட்கும் ஒரே கேள்வி இதுதான்.
தங்கள் செயல்பாடுகள் மற்றும் தங்கள் நலத் திட்டங்களை முன்வைத்து அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலின் போது வேட்பாளர்கள் தொலைத் தொடர்பு ஊடகங்கள் மூலமாக நேரடி விவாதம் நடத்துவது போன்று ஏன் நம் நாட்டிலும் நடத்தக்கூடாது? இது போன்ற விவாதங்களை தாங்கள் நேரடியாக நடத்துவதன் மூலமாக மக்கள் சிறந்த நிர்வாகிகளை நம் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பாக அது அமையக்கூடும் அல்லவா? நாங்கள் இதை எதிர்பார்க்கலாமா?
வாக்களிப்போம்!
ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!
விலை போகாமல் வாக்களிப்போம்!!!
இந்தத் தேர்தல் ஆக்க பூர்வமான விவாதங்களோ, குறை நிறைகளை எடைபோட்டு எதிர்காலம் யார் கையில் இருந்தால் நாடு வளமாக இருக்கும் என்கிற நோக்கமோ யாரிடமும் கிடையாது. ஜனநாயகம் கிட்டத்தட்ட சீர்கெட்டு ஊழல் மலிந்து குழப்ப நிலைமைக்கு நாடு போகும் அபாயம்தான் இருக்கிறது. இந்த நேரத்தில் நாட்டை கரை சேர்க்கும் வலிமை, ஆற்றல், திறமை யாருக்கு என்பதில்தால் போட்டா போட்டி. பெரிய கட்சிகள் இரண்டும் தங்கள் பாரம்பரிய அரசியல் கொள்கைகளில் எந்த மாற்றமும் செய்துகொள்ளவில்லை. காங்கிரஸ் நேரு காலத்திய ஆக்கபூர்வ நடவடிக்கைகளிலிருந்து நீங்கி, இந்திரா காந்தி காலத்து எதிர்களை எவ்வழியாகிலும் ஒழித்துக் கட்டும் வீம்பில் இருக்கிறது. தாங்கள் செய்த ஊழல்களை நியாயப்படுத்தவும், இனி நடக்காது என்பதற்கான உத்தரவாதம் எதையும் தராமல் எப்போதும் போல தூங்குகின்ற இந்திய மக்களின் தொடையில் திரிக்கத் தயாராக இருக்கிறது. தியாகம் எனும் சொல் அறவே காங்கிரசின் அகராதியிலிருந்து தூக்கி எறியப்பட்டுவிட்டது. அவரவர் சாமர்த்தியத்துக்குத் தக்கதாக கொள்ளையடித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு விட்டது. பாஜக வைப் பொறுத்த வரை வாஜ்பாய் பிரதமராக இருந்த காலம் தவிர அவர்கள் எப்போதும் எதிரணியில்தான் இருந்து வந்திருக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்கள் மதவெறியர்கள் என்றும், மைனாரிட்டிகளுக்கு இவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஆபத்து என்றும் பொய்க்கதைகளைச் சொல்லி மக்களையும் மைனாரிட்டிகளையும் மிரட்டித் தங்கள் ஆளுமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். இதற்கிடையே முந்தா நாள் பெயத மழையில் முளைத்த காளான்கள் எதிரில் வானோங்கி வளர்ந்திருக்கும் அரசியல் கட்சிகளைப் பார்த்து சவால் விட்டுக் கொண்டிருக்கின்றன. படுத்திருக்கும் யானையின் மீது இரண்டு எறும்புகள் ஊர்ந்தன. ஒரு எறும்பு சொல்லியது எனக்கும் இந்த யானைக்கும் ஒரு பிள்ளை பிறந்தால் எப்படி இருக்கும்? என்றது. சரி முயன்று பாரேன் என்றது அடுத்த எறும்பு. அப்போது யானை உடலை அசைத்தது இரு எறும்புகளும் கீழே விழுந்தன. முதல் எறும்பு சொன்னது, பார், இதற்கும் எனக்கும் ஒரு பிள்ளை பிறந்தால் என்று சொன்ன உடனேயே இந்த யானைக்கு உடல் சிலிர்க்கிறது என்று. (கதை வேறு. நாகரிகம் கருதி அதைச் சொல்லவில்லை) அதைப்போல யானை போன்ற பாஜகவும் காங்கிரசும் இந்த ஆம் ஆத்மியைக் கண்டு பயப்படுவது போல ஆம் ஆத்மி நினைக்கிறது. நாடு நலம் பெற, ஜனநாயகம் காப்பாற்றப்பட பாஜக எந்தவித பாகுபாடுமின்றி மக்களுக்காக ஆட்சி செய்வதும், காங்கிரஸ் அடித்த கொள்ளை போதும் எங்களை விடுங்கள் என்று மக்கள் அவர்களுக்கு ஓய்வு கொடுப்பதும், ஆம் ஆத்மியில் வேலைவெட்டி இல்லாதவர்களை போய் எங்காவது ஒழுங்காக வேலை பாருங்கள் என்று அனுப்புவதுமே இன்றைய நமது கடமை.
Sh Gopalan Sir, you focused the right points and show the right direction. Instability in politics, fragmentation on cast, religion and region, cunning and decisive, divide & rule strategies were caused a huge damage to our system . This also helped all the anti elements including super powers which are dictating our economy. This also evacuate the creams of talents from India to their side. This was not at all the vision and wishes of Mahatma, Patel , Subash . Air is polluted, we find the way to breath a fresh breeze in sea shore, Water is polluted , we forced to take nearest better water for survive, press is polluted, we choose the best which enrich our knowledge. In the same manner we should vote , based on PMship who has capability to control chariot of wolfs, eliminate the demons who already sucked our blood with their unethical stand, corruption and drive the future in right direction. FORCING NEXT ELECTION WILL DIP OUR ECONOMY TO MINUS.