இறுக்கிக்கட்டிச் சரமாய்
தொடுத்தபின்னும்
மணம்பரப்பும் மலர்போல
அடக்கிப்பின்னலிட்டும்
அடங்கமறுக்கும்
முன் உச்சிமுடிபோல
குடம்குடமாய் நீர்விட்டும்
மழையை விரும்பும்
மலர்ச்செடிபோல
எத்தனையோ மனிதர்கள்
அருகில் இருந்தும்
தொலைதூரத்திலிருக்கும்
உன்னையே எதிர்பார்க்கும்,
மனசு.
ஷைலஜா! இயற்பெயர் மைதிலி! அப்பா ஏ.எஸ். ராகவன் எழுத்தாளராக இருந்ததால் சிறுவயதிலேயே எழுதுவதில் ஆர்வம் உண்டானது! சிறுகதைகள், நாவல் ஆகியவற்றுக்குப் பரிசு பெற்றிருந்தாலும் இன்னமும் நல்லதொரு படைப்பிற்குக் கற்பனை விரிந்து வாசிப்பவரின் காலமெல்லாம் நினைவில் நிற்கும்படி எழுதுவதே லட்சியம். கவிதைகள், பக்திப் பாடல்கள் பல எழுதி வருகிறேன். நாலாயிர திவ்யப்ரப்ந்தம் முலமாக ஆழ்வார்கள் பாசுரத்தின் அழகுத் தமிழினை ஆன்லைனில் உரையாய்க் கூறி வருகிறேன்!
அருமை!.அருமை !!
உள்ளன்பில் உள்ளவர்
எல்லைகள் கடந்து இருப்பினும்
வயிறு நிறைந்தும்
சுவையால் நீளும் கைபோல்
விலகாத மனசு விளங்காத காதல் , நல்ல கவிதை பாராட்டுக்கள் .
மிக்க நன்றி திரு.அமீர்!