மலர் சபாmaraiyon

மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை

மறையோன் தனது ஊரையும் , தான் தென்னனை வாழ்த்திய காரணத்தையும் உரைத்தல்

பாண்டிய நாட்டின் சிறப்பினையும்
அம்மன்னரின் கொடை முதிலிய செய்கையையும்
என் கண்கள் குளிரக் கண்டேன்;
அதனால் அம்மன்னரை வாழ்த்தி வந்திருந்தேன்;
அதனால் வருகை புரிந்தேன்.
முத்தீயில் வேள்வி எடுக்கும் மறையோன்
இங்ஙனம் கூறக் கேட்டு..

மதுரைக்குச் செல்வதற்கு உரிய நல்ல வழியைப் பற்றி மறையவனிடம் கோவலன் வினாவுதல்

மதுரைக்குச் சென்றிடும் செவ்விய வழி யாது
என நீவிர் கூறுவீராக..
என்று வேதம் ஓதும் மறையோனிடம்
கேட்டனன் கோவலன்.

மாங்காட்டு மறையோன் கூறிய மதுரை வழி கால நிலைமையையும் வழியின் அருமையையும் உணர்த்தல்

அரசியலைத் தொழிலாகக் கொண்ட
அமைச்சரோடு சேர்ந்து
தன் செங்கோல் வளையும் வண்ணம்
அரசனும் நெறி தவறி நடக்க,
அதனால் நல்லாட்சி இழந்த நாட்டைப் போல..

வேனில் காலமெனும் அமைச்சனோடு
கொடுங்கதிர் சூரியன் சேர்ந்து
தன் நெறிகளில் தவறித்
தான் உருவாக்கிய நலன்களைத்
தானே அழித்தனன்.

முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும்
தன் இயல்பது மாறி அழிந்து
தமது நன்மைகளில் குன்றி
நம்பிய மக்களுக்கு
நடுநடுங்கக்கூடிய துயர் விளைவித்தது.

தம் இயல்புநிலை மாறிப்
பாலையென வடிவம் மாறி விளங்கிய
இக்காலம் தன்னில்
நீயும் இக்காரிகை தன்னுடன்
பயணம் வந்துள்ளாய்..

கற்பாறைகளும் சிறுமலைகளும்
அரிதான வழிகளும் நிறைந்த,
காண்போரைக் குழப்பமடைய வைக்கும்
இக்கானல் நீர்த்தோற்றமும் உடைய
இந்நெடிய பாலைவழியைக் கடந்து சென்றால்..

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  54 – 70

http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html

படத்துக்கு நன்றி:

http://www.inbaminge.com/t/slokas/Vedic%20Chanting/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.