ஆண்டுவிழா போட்டி வசந்தம் கவிதை
விசாலம்
இயற்கை அன்னையே !
நீ தந்தாய் ஒரு வசந்த காலம் .
காலங்களின் ஒரு சிறந்த காலம் .
சின்னஞ்சிறு செடியின் தளிர்ப்பு,
காணுகின்றேன் பூவின் மலர்ப்பு ,
அருகே நடக்க வீசும் நறுமணம்
அடுத்தடுத்து மலர்கள் பல வண்ணம் ,
மலர்கள் மலர்ந்தது எப்படி ?
மணம் வந்தது எப்படி?
மலரைக்கண்டு வந்த வண்டு ,
வண்ணக்கலவை பலவும் கண்டு ,
சுற்றிச்சுற்றி ரீங்காரம் கொண்டு
மகரந்தத்தின் சுவையைக் கண்டு
தேனைக்குடித்த மயக்கம் என்ன?
ஆனந்தத்தின் எல்லைத்தான் என்ன ?
அந்தத் தேன் வந்தது எப்படி?
அதில் இனிப்பு வந்தது எப்படி?
சூரியகாந்தி மலர் கண்ட சூரியோதயம்
கிழக்கு திசையில் சிவந்த பொன் உதயம்,
சூரியனின் வழியில் தியானப் பார்வை
அழகு புறாக்கள் பறக்கும் கோர்வை ,
நிலவைப்பார்த்து நிற்கும் அல்லிமலர்,
மகிழ்ந்து இதழ் விரிக்கும் வெள்ளை மலர்.
காலையில் தாமரை மலர்வது எப்படி?
இரவில் அல்லி மலர்வது எப்படி?
பச்சை நிறத் தளிர்ச்செடிகள்,
கம்பளம் போல் நிறைந்த புற்கள்,
தென்றல் வீச அசையும் மரங்கள்,
சிட்டுக்குருவி கட்டும் கூடுகள்,
சிற்பிகளுக்கு எட்டாத வினோதங்கள்,
வண்ணாத்தியின் வண்ணக்கலவைகள்.
அந்த வண்ணக்க்லவை வந்தது எப்படி?
வசந்தமே உன்னைப்படைத்தது எப்படி?