நித்தமும் நிம்மதி
சீர்காழி உ செல்வராஜு
வசந்தமே தொலைந்ததென
வாழ்ந்தது போதுமென வாழாதே.
நெஞ்சினில் நெருப்போடு
நெருஞ்சிமுள் குணத்தோடு
நிம்மதி நிம்மதி என தேடாதே.
நிம்மதி எங்குமில்லை
நிரந்தரம் ஏதுமில்லையென
நினைந்தே உருகாதே.
பிறந்தவர் பயனற்று
புலம்புவதில் என்ன பயன்?
திறந்த மனங்கொண்டு
திருந்திட வேண்டாமோ?
முற்போக்குச் சிந்தனையோடு
முயன்று முயன்று முத்திரைப் பதித்து
முன்னேற்றம் அடைந்தவர்களை அறியாயோ?
கரடுமுரடான வாழ்க்கை கரைந்தே போக
கற்ற அறிவினால் களையெடு.
நித்தமும் கிட்டும் நிம்மதி!