Author: உ. சீர்காழி செல்வராஜூ

  • விளைநிலம்

    -சீர்காழி செல்வராஜு

    ஆழ்மனமெனும் நிலத்தினிலே நல்
    எண்ணமெனும்
    விதைவிதைப்பின்
    நறுமணக்கும் தூரமெங்கும்
    நன்மை
    செய்தே பெயரெடுக்கும்!

    அரைகுறையாய் மேலோட்ட
    அறிவாற்றல்
    அடித்துச் செல்லும்
    உவர்ப்பு
    நிலம்போல் பயனற்று
    உழைத்த
    பலனை கெடுத்துவிடும்!

    செயல்களை உரங்கள்போலச்
    செவ்வனே
    இட்டு வந்தால்
    செழிப்பாய்க்
    கனிதந்து
    செந்தமிழ்போல்
    இனித்திடுமே!

    சுயமான சிந்தனையும்
    சுயமான
    முயற்சியுமே
    நன்மை
    தரும் விளைநிலம்போல்
    நற்பண்புகளாய்
    மகசூல் தரும்!

    நல்லதொரு சூழலிலே
    நம்குழந்தைகளை
    வளர்த்து வந்தால்
    நல்ல
    குடிமக்களாக
    நானிலத்தில்
    விளங்கிடுவர்!

     

    Share
  • நிலவே சாட்சி!

    -சீர்காழி உ செல்வராஜு

    அமைதியான அலைகளற்ற                                                 
    அந்திநேரப் பொழுதினிலே                                                     moon for kavithai
    மெல்ல மெல்லத் தெரிகிறாயே
    மென்மையான வெண்ணிலவே!

    சூடான நிலைமாறிச்
    சுகமான பால்நிலவே
    உன்னழகு என்னருமை!
    உனக்கு எங்கும் ரசிகர்களே…!

    ஓய்வெடுக்க அணியணியாய்
    ஓகோவெனத் திரண்டிடுவர்
    களிப்புடனே ரசிகர்களோ
    கடந்தகாலம் பகிர்ந்திடுவர்!

    எட்டாத தூரத்தில்
    கிட்டாத காதலியாய்
    மட்டிலா அன்புடனே
    மயக்கத்திலே மூழ்கடிப்பாய்!

    உம்முடனே எம்முன்னோர்
    உரைத்ததெல்லாம் சொல் நிலவே!
    இறந்தகாலம் நிகழ்காலம்
    எதிர்காலம் நீ அறிவாய்!

    அத்தனையும் அங்கிருந்தே
    அற்புதமாய் நோக்குகிறாய்
    நிழல்படம் எடுத்திருப்பாய்
    நிறைமதியே! நீ தானே சாட்சி…!

    Share
  • பூக்களைப் பறியுங்கள்!

    சீர்காழி உ. செல்வராஜு

    புதைந்து செரிந்த புலனெறி வழக்கங்கள்
    புதைபொருள் போலப் புராணங்கள் பற்பல!                                        roses for பூக்களைப் பறிக்காதீர் கவிதை
    பூத்துக் குலுங்கும் சொற்பூக்கள் ஏராளம்
    பூஞ்சோலை போன்றதே பைந்தமிழைப் பாரீரோ?

    எதுகையும் மோனையும் எழிலாய் மின்னிடும்!
    எழுத்துகள் யாவையும் எக்காலும் இனித்திடும்!
    ஆடலாய்ப் பாடலாய் ஆகமங்கள் கமழ்ந்திடும்!
    ஆலம் விழுதுபோல் அத்தனையும் தோரணங்கள்!

    கலையும் சுவையும் இரண்டறக் கலந்த
    கன்னித் தமிழோ கவிநயம் புகட்டிடும்!
    காப்பியப் படைப்புகள் கண்முன் நிறுத்திடும்
    காலத்தால் அழியாக் கலைச்சொற்கள் பாரீரோ?

    எளிதில் புரிந்திடவே எடுத்தாள்வோம் புதுமுறையில்
    எங்கெங்கும் மணம்வீச எழுத்துப்பணி செய்திடுவோம்!
    புலமையோர் ஆக்கங்கள் புதுமை படைத்திடவே
    புவியெங்கும் பரப்பிடுவோம் பூக்களைப் பறியுங்கள்!!

    Share
  • அன்னையின் கருணை!

    -சீர்காழி உ. செல்வராஜு

    அன்னையின் கருணை அமுதம் போன்றது

    அன்பே தாயென வடிவம் பெற்றதுmother and a child

    உயிரைக் காத்திடும் பண்பில் உயர்ந்தது

    உறவே நிறையென உள்ளம் நிறைந்தது!

     

    வாழ்வின் தத்துவம் சொல்லித் தந்தது

    வாழ்வே கலையென வகுத்துச் சொன்னது

    உணர்வைச் செதுக்கிடும் மகிமை வாய்ந்தது

    உழைப்பே உயர்வென ஊக்கம் படைத்தது!

     

    பசியில் பகிர்ந்திடக் கற்றுத் தந்திடும்

    பரிவே மூச்சென மலரச் செய்திடும்

    இனிய சொற்களைப் பேச வைத்திடும்

    இல்லமே கோயிலென உணரச் செய்திடும்!

     

    வினாக்கள் பற்பல விடைகள் கிடைத்திடும்

    விதியே இன்றி வினோதம் படைத்திடும்

    நிழலாய் ஒளியாய் நிலையாய்க் காத்திடும்

    நினைந்தே நெஞ்சம் நிம்மதி பெற்றிடும்!

     

    கருணை உள்ளம் கண்களில் மின்னிடும்

    கண்களில் கண்ணீர்ச் சொரிந்து வடிந்திடும்

    தேகம் வளர்ந்திடத் தேனாய்ச் சுரந்திடும்

    தேறிட மனமோ அம்மா என்றிடும்.

     

    Share
  • நித்தமும் நிம்மதி

     

    சீர்காழி உ செல்வராஜு

     

    வாழ்வே இல்லையெனGlacial-Lake-537x402

    வசந்தமே தொலைந்ததென

    வாழ்ந்தது போதுமென வாழாதே.

    நெஞ்சினில் நெருப்போடு

    நெருஞ்சிமுள் குணத்தோடு

    நிம்மதி நிம்மதி என தேடாதே.

    நிம்மதி எங்குமில்லை

    நிரந்தரம் ஏதுமில்லையென

    நினைந்தே உருகாதே.

    பிறந்தவர் பயனற்று
    புலம்புவதில் என்ன பயன்?

    திறந்த மனங்கொண்டு

    திருந்திட வேண்டாமோ?

    முற்போக்குச் சிந்தனையோடு

    முயன்று முயன்று முத்திரைப் பதித்து

    முன்னேற்றம் அடைந்தவர்களை அறியாயோ?

    கரடுமுரடான வாழ்க்கை கரைந்தே போக

    கற்ற அறிவினால் களையெடு.

    நித்தமும் கிட்டும் நிம்மதி!

    Share