பொன் மாலை

கே. ரவி

Plum-tree-poetry

 

வானளாவி நின்றதென்ன வாமன ஸ்வரூபமோ
வார்த்தையுள் வளர்வதென்ன மோனஞான தீபமோ
கானமாகி கானமாகிக் கரைவதேவி தேகமோ
காதலாகிக் காதலாகிக் கவிதையாக மாறுமோ

தூண்பிளந்த சிங்கமேதா மோதரன்மா மாயக்கண்ணன்
ஆதிசேட சயனனேயா லிலைக்கிடந்த நீலவண்ணன்
பூவமர்ந்த செல்வியேபின் தீயெதிர்த்து நின்றவள்
சொற்பிளந்து வந்தவளுள் ஜோதியுள்ம லர்ந்தவள்

கூத்தெடுத்த பாதமேயக் கூற்றுதைத்த தென்னவோ
தீயுதித்த பாலனைச்செந் தேன்னனைப்ப தென்னவோ
தந்தமேயோர் எழுதுகோலாய் ஆனதாமது போலவே
சந்தமேமென் மலர்களாகச் சூட்டுவேன்பொன் மாலையே

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *