பொன் மாலை
கே. ரவி
வானளாவி நின்றதென்ன வாமன ஸ்வரூபமோ
வார்த்தையுள் வளர்வதென்ன மோனஞான தீபமோ
கானமாகி கானமாகிக் கரைவதேவி தேகமோ
காதலாகிக் காதலாகிக் கவிதையாக மாறுமோ
தூண்பிளந்த சிங்கமேதா மோதரன்மா மாயக்கண்ணன்
ஆதிசேட சயனனேயா லிலைக்கிடந்த நீலவண்ணன்
பூவமர்ந்த செல்வியேபின் தீயெதிர்த்து நின்றவள்
சொற்பிளந்து வந்தவளுள் ஜோதியுள்ம லர்ந்தவள்
கூத்தெடுத்த பாதமேயக் கூற்றுதைத்த தென்னவோ
தீயுதித்த பாலனைச்செந் தேன்னனைப்ப தென்னவோ
தந்தமேயோர் எழுதுகோலாய் ஆனதாமது போலவே
சந்தமேமென் மலர்களாகச் சூட்டுவேன்பொன் மாலையே