கிரேசி மோகன்

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

கண்ணன் திருப்புகழ்(வெண்பாக்கள்)….
———————————————————————–
’’கண்ணன் வெண்பாக்கள்’’
———————————————–

 

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

மனைவிமக்கள் சுற்றத்தார், மீது பொழிந்தாய்,
அணைதிறந்த வெள்ளமாய் அன்பை, -மனமே,
விழலுக்(கு) இறைத்தநீர் வீணாமே , கண்ணன்,
கழலுக்குப் பாய்ச்சதில் கொஞ்சம்….(101)
மதிலரங்கக் கோயில், தனிலுறங்கும் மாலே,
விதிநெருங்கும் வேளை வருமுன், -பதிலளிப்பாய்,
தேனடைக்குள் தேனியாய், நீயிருக்க என்னுள்ளே,
நானெதற்கு வீணாய் நவில்….(102)

 

மெய்யே அகலாக, மேவுமுயிர் நெய்யாக,
உய்யும்ஒரே ஆன்மன் ஒளியாக, -அய்யநின்,
ஆரா தனையல்லால், வேறே துமெண்ணாத,
சீரான வாழ்வில் செலுத்து….(103)

 

முக்திமார்க ஆனந்தம், சத்தான சித்தாகும்,
யுக்தியுடன் பூமிக்கு வந்துவிட்டால், -பக்திமார்க,
பாதைக்கு அப்பனாகும்; பத்தினியே ஆனாலும்,
சீதைக்கு சித்தப்பா ராமன்….(104)

 

முலைகனத் தாயை, அலைக்கழிய விட்டு,
கொலைகுண பூதனை கொங்கை, -மலைசுவைத்தாய்,
அந்நஞ்சைப் பாம்பின்மேல், ஆடி ஜெரித்தவன்பால்,
நன்நெஞ்சே நிற்பாய் நினைந்து….(105)

 

முரணெனப் பட்டாலும், மூலமே நின்னை,
வரவழைக்கக் கண்டேன் வழியை, -இரணியன்போல்,
இல்லை இறையென்று, சொல்லி இரையாக,
மல்லுக்(கு) அழைப்பேன் முனைந்து….(106)

 

 

——————————————————————————————————————

.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.