திருமால் திருப்புகழ் (119)
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————
’’கண்ணன் வெண்பாக்கள்’’
————————————————
தொண்டைக் கட்டு வந்தபோது வேண்டுதல் வெண்பா
——————————————————————————————-

கொண்டை மயிற்பீலி, கொண்டென் கரகரா,
தொண்டை சரிசெய்வாய் துப்புரவாய், -பண்டரி,
விட்டலா பாண்டுரங்கா, வேய்ங்குழல் நாதமாய்,
கொட்டவை வார்த்தைகளை சட்னு….(227)
குரல்வளை தன்னை, கிரகணம் பிடிக்க,
பொருள்விளங் காயாச்சு பேச்சு, -அருள்மழையை,
தொண்டையில் பெய்திடுவீர், பண்டரி நாதரே,
விண்டுரைக்க வைப்பீர் வசனம்….(228)
வலம்புரியோ(டு) அன்று, களம்புகுந்தோன் இன்று,
நலம்புரிந்தான் பேசிட நன்றாய், -வளம்புரிந்தான்,
சும்மா இருந்த, சிருத்தொண்டை ஊதினான்,
அம்மா அறிந்தேன் அரி….(229)
வாத புரீசா, வ்ரஜகுல விஸ்வாசா,
சேதம் அசேதனம் செய்திடுவோய், -தோது,
புரியெந்தன் தொண்டை, சரியாகக், காக்கும்,
அரியுந்தன் தொண்டைநீ ஆற்று….(230)
பாடிப் பெறமோட்சப், பாதை இருக்கையில்,
நாடிப் பறந்தேன் நவநீதா, -சாடிக்,
கெடுக்கும் குரலெனக்கு, கொஞ்சமும் வேண்டாம்,
முடக்கி மவுனியாய் மாற்று….(231)
——————————————————————————————————-
என்னதவம் ஆனாலும், எங்கதைச் செய்தாலும்,
தன்னந் தனியாய்த் தவிக்காதே, -கண்ணனருள்,
கூட அழைத்துச்செல், கைகூடும் காரியங்கள்,
மாடுகள் மேய்த்தோனின் பாடு….(232)
———————————————————————————————————————
படங்களுக்கு நன்றி:
http://kamadenu.blogspot.in/
