மரணத்தின் வண்ணம்!
ஐயப்பன் கிருஷ்ணன்
கருவண்டின் கண்ணொத்த
கருஇருளை வழித்து
மனதில் பூசிக் கொண்டாயிற்று
இனியவள் வரலாம்…
கரும்பூச்சில்
இனி தெரியாது
அவள் முகம்…
மெல்லத் தின்று கொண்டிருக்கிறது
கருநீலம் என்னை.
செந்தீப் பிழம்புகளும்
பின்பு என்னை விழுங்கும்
நாளையும் அவள் வரலாம்
வெண்சாம்பல் தனைப் பார்க்க
மனதோடு வெந்து சாம்பலாக
puriyalai anne