கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
“ஆகாச கங்கையை பூகோளம் பெற்றிட
த்யாகேசன் வார்சடை ஏற்றதை -ஓ!கேசவ்
பண்ணினான் சித்திரமாய் ; பார்த்து ரசித்திட
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு”….கிரேசி மோகன்….
“காளிய நர்த்தனம் காட்டிய கண்ணனும் ,
காளியுடன் ஆடும்முக் கண்ணனும் -மூளியாம்
மண்டையில் ஆட மதமாச் சரியம்போய்
குண்டலினி சுண்டெலியா கும்”….கிரேசி மோகன்….