கோபாலன் வெங்கட்ராமன்

காந்தி இயக்கம்,
(பாரதி இலக்கியப் பயிலகம், 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, தஞ்சாவூர் 613007)

சுற்றறிக்கை.

gandhiமகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக திருவையாறு காந்தி இயக்கம், தஞ்சை மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் கருத்துரையாடல், காந்திய அறிஞர்களின் கருத்து விளக்கங்களும் கொண்ட ஒருநாள் பயிலரங்கம் வருகிற 18-10-2014 சனிக் கிழமை காலை 10 முதல் மாலை 5 வரை திருவையாறு மேட்டுத் தெருவில் உள்ள சரஸ்வதி அம்பாள் தொடக்கப் பள்ளியில் நடைபெறும். இந்த கருத்தரங்கில் காந்திய சிந்தனைகளையும், அவரது கோட்பாடுகளைப் பற்றியும் மாணவர்கள் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் இது நடத்தப்படுகிறது. ஓரளவு மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கையையும், கருத்துக்களையும் அறிந்த அல்லது அறிந்து கொள்ளும் ஆவலுள்ள மாணவர்கள் சிலரை ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் அழைத்து இதில் கலந்து கொள்ள வைக்க வேண்டுமென்பது எங்கள் அவா.

இந்த ஒருநாள் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் மாணவர்கள் குறித்த விவரங்களைக் கீழ்கண்ட முகவரிக்கு 15-10-2014ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். அனுப்பவேண்டிய முகவரி:
காந்தி இயக்கம், பாரதி இலக்கியப் பயிலகம்,

28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை,
தஞ்சாவூர் 613007. தொலைபேசி: 9486741885.
தலைப்பு: சமுதாயத்துக்குத் தேவையான காந்திய சிந்தனைகள்.
நாள்: 18-10-2014 சனிக்கிழமை நேரம்: காலை 10 முதல் மாலை 5வரை.

1. ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் 4 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம்.

2. மாணவர்கள் தங்கள் சொந்த செலவில் வந்து செல்ல வேண்டும். மதிய உணவும் இடைவேளை
தேநீரும் அளிக்கப்படும்.

3. கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும், காந்திஜியின் நூலும் பரிசளிக்கப்படும்.

4. மாணவர்கள் மகாத்மா காந்தியடிகளின் சிந்தனைகளில் கீழ்கண்ட ஏதாவதொரு தலைப்பில் (5 பக்கங்களுக்குள்) ஒரு கட்டுரையை எழுதிக் கொண்டு வரவேண்டும். அந்த தலைப்பில் மாணவர் களின் கலந்துரையாடல் நடைபெறும்; தொடர்ந்து காந்திய அறிஞர்கள் அவைகளுக்குத் தகுந்த விளக்கங்களை அளிப்பார்கள்.

தலைப்புகள்:

1. காந்திஜி – சோதனைகளும் சாதனைகளும்.

2. தென்னாப்பிரிக்காவில் காந்திஜி.
3. இந்திய சுதந்திப் போராட்டத்தில் காந்திஜியின் பங்களிப்பு.
4. உலக அமைதிக்குத் தேவை காந்திய கொள்கைகளே!

கல்லூரி முதல்வர்களும், துறைத் தலைவர்களும், இப்பயிலரங்கின் முக்கியத்துவம் கருதி தங்கள் கல்லூரியிலிருந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பங்கேற்கச் செய்ய வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

தஞ்சாவூர்,

9-10-2014. தலைவர், காந்தி இயக்கம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.