கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
பார்த்தசாரதி பெருமாள்
———————————————
கவுத்த தலையுடன், காண்டீபம் சாய,
தவித்த விஜயனைத் தேற்றி, -சவுக்கினை,
வீசிப் புவிபார, தூசியைத் தட்டுகிறான்,
வாசிக்க கீதை வடித்து’’….
மீசைக்கு பாரதி, ஆசைக்கு ருக்மணி
ஓசைக்கு வெண்சங்கின் ஓங்காரம் -பூசைக்கு,
ஆழ்வார்கள் பாசுரம்,அல்லிக் குளக்கரையில்
வாழ்வோனை நெஞ்சே வணங்கு…..
திருவல்லிக் கேணி வேதவல்லித் தாயார்
———————————————————————-
வேதவல்லித் தாயே, வினைதீர்க்கும் செங்கமலப்,
பாதவல்லி, பார்த்தன்தன் சாரதியின் -கீதவல்லி,
ஏதமில்லா ஞானத்தை, ஏதுமில்லா மோனத்தை,
சாதகனென் சிந்தையில் சேர்….கிரேசி மோகன்….