என் கவிதைகளின் தொகுப்பே என் சுயசரிதை, என் சுயமான உயிரின் சரிதை; ஒரு புள்ளி வெடித்துச் சிதறி, பேரண்டங்களாக எல்லையின்றி விரிந்துகொண்டே இருக்கும் வியனுலகாம் ப்ரும்மத்தின் சரிதை. மற்ற அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள் எலும்பும் சதையுமான உடலின் சரிதை. அதைக் கொண்டாட வேண்டியதில்லை. சொல்லிக் கொள்ளும் அளவுக்கு என் வாழ்வில் நான் எதையும் சாதித்து விடவும் இல்லை. அவ்வளவே. நன்றி. கே.ரவி
அன்புசால் ரவி அவர்களுக்கும் அருமைக்குரிய பேராசிரியர் வ.வே.சு. அவர்களுக்கும் காவிரிமைந்தன் வரையும் மடல்!
வானவில் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் நடக்கும் நான்கு நாள் விழாக்கள் பற்றி நானறிந்தபோது.. பங்கேற்க வாய்ப்பின்றிப் போனதால் மனம் பறிதவித்துதான்போனது!
அரிச்சுவடிபோல் வழிகாட்டும் நல்லதோர் விழா.. பாட்டுப்புலவனுக்கு தமிழ் நாட்டில் நடக்கும் திருவிழா.. உற்றதோர் உரிமைகொண்ட உள்ளங்கள் கூடியெடுக்கும்் விழா! புரட்சிக்கு வித்திட்டு புதுமைக்கு கரம்நீட்டி.. கருத்துக்களால் வீரமூட்டி.. தன் கவிதைகளால் இன்றும் என்றும் நம் மனத்தினில் வாழும் மகாகவி பாரதிக்கு விழா என்பது தமிழுக்கு நாம் செய்யும் தனிப்பெரும் தொண்டெனலாம்! அறிஞர்பெருமக்கள் அரங்கேற.. சுவைஞர்பலர்கூடி அதைக்கேட்க.. இன்பம் தமிழாக ஓடிவர.. இதயம் தேனாற்றில் நீந்துமன்றோ?
பாரதி பிறந்தநாளில் தொடங்கி பாங்குறவே நடந்தேறும் இவ்விழா சிறக்க.. வெற்றிபெற என் வாழ்த்துக்களை இங்கே பதிவுசெய்கிறேன்..
உள்ளன்போடு உங்கள் சேவைக்குத் தலைவணங்கி பாராட்டி மகிழ்கிறேன்!
அன்புடன்
காவிரிமைந்தன்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
தற்போது – துபாய்
00971 50 2519693
kaviri2012@gmail.com
http://www.thamizhnadhi.com