-செண்பக ஜெகதீசன்
கண்ணுடைக் கரும்பை நட்டுவைத்தே 
கதிரவன் காணப் பொங்கலிட்டு,
பெண்ணொடு ஆணும் குரவையிட்டுப்
பகலவன் அருளப் படைத்திடுவோம்,
வண்ண மஞ்சள் இஞ்சியுடன்
உறவும் நட்பும் சேர்ந்திடுவோம்,
மண்ணில் உழவரை வாழ்த்தியேதான்
மகிழ்வோம் பொங்கல் நாளினிலே…!
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…