கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
”ஒருவர் படுக்க இருவர் அமர
வருகை புரிந்தவரால் நிற்க -ஒருயிரவில்
பொய்கைபேய் பூதத்தார் பின்னிப் பிணைந்திட
செய்த மழையோன் சரண்”….
”சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே
எந்தையே ஏகப் பரம்பொருளே -விந்தையே
தீராத ஆட்டத்தை மாறாத தோட்டத்தில்
சீராக ஆடிடும் சேய்”….
”காயாம்பூ வண்ணத்தை கற்றோர்தம் எண்ணத்தை
ஆயர்தம் சின்னத்தை மண்ணையுன் -ஓயாத
மாயத்தை ஒப்பில்லா சீயத்தை நேயத்தில்
தாயொத்த தாயத்தைத் தேடு”….கிரேசி மோகன்….