தமிழ் இனி மெல்ல… ஒரு அரிசோனனின் புதின வெளியீட்டு நிகழ்ச்சி!

0

தமிழ் இனி மெல்ல…

ஒரு அரிசோனனின் புதின வெளியீட்டு நிகழ்ச்சி!

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழன்பர்களை வரவேற்கிறோம்.

The Venue:

Youth Hostel

2nd Avenue, Indira Nagar

Chennai, Tamil Nadu 600020

India

Time

15-02-2015

Sunday 4.00 P.M to 6.P.M.

ariso

இது தமிழின் கதை. எதிர்காலத்தையும், தமிழ் மன்னர்களின் சிறப்பான ஆட்சியையும் இணைகிறது. தற்பொழுதைய நிலை நீடித்தால் தமிழ் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்ற கற்பனையுடன், அந்த எதிர்காலத் தமிழர்களுக்கு பழங்காலத்துத் தமிழர்கள் ஒரு தங்கச் சுருளில் விட்டுச்சென்ற வரலாற்றை நான்கு பகுதிகளாகக் கூறும் புதினமே “தமிழ் இனி மெல்ல…”

எதிர்காலம் எப்படி இருக்கும்? தமிழ்நாட்டின் நிலை என்ன, தமிழின் நிலை என்ன, தமிழர்களின் நிலை என்ன என்பதை முதல் பகுதி விவரிக்கிறது. முதல் பகுதி இருபத்தைந்தாம் நூற்றாண்டில் சுழல்கிறது.

இரண்டாம் பகுதி இராஜராஜர் தஞ்சைகோவிலைக் கட்டிமுடித்த காலதத்தில் துவங்குகிறது. அரசை விரிவாக்கும் இலக்கை அடைத்த அவரின் புது இலக்கைப்பற்றி புதினம் பேசுகிறது. அவர் தனது இளவல் இராஜேந்திரனுக்கு சோழப்பேரரசை ஒப்படைப்பற்றியும் அவர்கது புதிய இலக்குபற்றி அவரது மன ஓட்டங்களையும் விவரிக்கிறது. சோழநாட்டிற்கும் சாளுக்கிய நாட்டிற்கும் உள்ள உறவினையும், மற்ற நாடுகளுடன் உள்ள போராட்டங்களையும் உணர்த்துகிறது.

“தமிழ் இனி மெல்ல..”வின் முதல் புத்தகம் இத்துடன் முடிகிறது. இது தமிழிலும், ஆங்கிலத்தில் “The Golden Scroll (The story of a langugage and its people)” என்ற தலைப்பிலும் ஒரே சமயத்தில் வரும் பிப்ரவரி 15ம் தேதி தாரணி பதிப்பகத்தாரால் திரு வையவன் அவர்கள் முன்னிலையில் வெளியிடப்படுகிறது. இடம் [பின்பு அறிவிக்கப்படும். அனைவரும் வருக. வருபவர்கள் கீழ்க்கண்ட மின் அஞ்சலுக்கு எழுதினால், தொடர்பு கொள்ளப்படும். (oruarizonan@gmail.com )

அடுத்த பகுதிகள் இராஜேந்திரன், அவனது மகன்களான இராஜாதிராஜன், இராஜேந்திரதேவன், வீர ராஜேந்திரன், இரண்டாம், மூன்றாம் குலோத்துங்க சோழர்கள், மற்றும் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், மார்கோ போலோ கண்ட பாண்டியப் பேரரசை ஒரு குடைக்கீழ் ஆண்ட குலசேகர பாண்டியன் இவர்களின் காலத்தில் நடை போடுகிறது. அத்துடன் தமிழ் மன்னர்களின் அழிவு ஏற்படக் காரணமான மாலிக் காஃபூரின் படையெடுப்பையும் கண்முன் நிறுத்துகிறது.

இந்த வரலாற்றை அறிந்த எதிர்காலத் தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விளக்கி புதினம் நிறைவுபெறுகிறது.

இந்தப் புதினம் ஒருசில நாயக-நாயகியரின் கோணத்தில் பார்க்கப்படுவதில்லை. அனைவரின் கோணங்களிலிருந்தும் வரலாற்றுக் கதையை நடத்திச் செல்கிறது.

வரலாற்றை விவரிக்கும் புதினம், அப்படி ஏன் வரலாறு நிகழ்ந்தது என்பதை கதாசிரியரின் கற்பனைக் குதிரையில் வாசகர்களை ஏற்றிச் செல்கிறது.

அரிசோனா மகாதேவன்

(ஒரு அரிசோனன்)

யு.எஸ்.ஏ.

கதையைப் படித்த சிலரின் கருத்துக்கள்

ஜவஹர் பிரேமலதா, பேராசிரியர், சேலம்

அரிசோனா மகாதேவன் (ஒரு அரிசோனன்) புலம் பெயர்ந்த ஒரு தமிழர். தமிழின் அருமையை பெருமையை அந்நிய சூழலில் உணர்ந்து தனக்கான அடையாளம் மொழியே என்பதை உணர்ந்து தான் உணர்ந்ததை தாய்நாட்டுத் தமிழருக்கும் எடுத்துரைக்க இந்நாவல் புனைந்துள்ளார்.

உணர்வதை உணர்த்த நினைப்பதே …அதுவும் சுவையாக … ஒரு கதையாக ….உணர்த்த முயல்வதே …..ஒரு படைப்பின் முதல் வெற்றியாகிறது. வெற்றுரைகளாக இல்லாமல் மாபெரும் வரலாற்றை ஆழ்ந்து அறிந்து வலுவான ஆதாரங்களினடிப்படையில் “தமிழ் இனி மெல்ல…” என்ற நாவல் எழுதப்பட்டுள்ளது.

இது முன்னைப் பழைமைக்கும் பழமையான, பின்னைப் புதுமைக்கும் புதுமையான என்றுமுள தென் தமிழின் முந்தைய வரலாற்றையும் எதிர்கால வரலாற்றையும் எடுத்துரைக்க தமிழில் வந்துள்ள நாவல்களிலிலேயே தனித்தன்மை வாய்ந்தஒரு நாவலாகும்.

தமிழ் நாவல்களில் பெண் விடுதலை,சமூகவிடுதலை இனவிடுதலை,சாதி விடுதலை என எத்தனையோ பாடுபொருள்களில் படைப்புகள் எழுதப்பட்டுள்ளன. சமூகத்தைப் பீடித்துள்ள பலச் சமூக விரோதப் போக்கை நாவல்கள் சாடியுள்ளன. ஆனால் தமிழுக்கு எதிரான தமிழர்களின் விரோதப்போக்கை எந்த நாவலும் எடுத்துரைத்ததில்லை. தமிழுக்குத் தமிழ் உணர்வில்லாத தமிழரிடமிருந்துதான் விடுதலை வேண்டும் என்பதை மிகச்சிறப்பாக நாவலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

மிக எளிய நடை. படிக்கத்தூண்டும் உரையாடல்கள். இந்நாவல் ஒரு வரலாற்று நாவல். இதில் வரலாறும் உள்ளது. ஒரு துப்பறியும் நாவல் போல் வாசகரை கட்டிப்போடும் விறுவிறுப்பும் உள்ளது.தமிழின் நிலையை வைத்து எழுதப்பட்ட நாவல் இது ஒன்றாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் துப்பாக்கியோ, அணுகுண்டுகளோ தேவையில்லை.அந்த இனத்தின் மொழி அழிந்தாலே போதுமானது என்பதை நாவலாசிரியர் நிகழ்ச்சிகளின் வழியும் பாத்திரங்களின் வழியும் எடுத்துரைத்து எச்சரிக்கிறார்.

ஒரு மொழியின் வாழ்வும், வளமும், வளர்ச்சியும் அம்மொழி பேசும் மக்களின் வாழ்வும் வளமும் வளர்ச்சியுமாகும். படைப்பாளர்கள் தாங்கள் உணர்வதைச் சமூகத்திற்கு ஏதோ ஒரு வகையில் உணர்த்த முயல்கின்ற போக்குத்தான் படைப்புகளாகத் தோற்றம் கொள்கின்றன.

ஒரு சமூக மாற்றம் தேவை.

ஒட்டார் பின்சென்று வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று.

என்ற திருக்குறள் கருத்தை ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும். நாளை உலகிலுள்ள பிற மொழியாளர்கள், “பிறந்ததும்தான் பிறந்தேன் ஒரு தமிழனாகப் பிறந்தேனா?” என்று ஏங்க வேண்டும். அந்நாள் எந்நாள்?

இந்நாவல் அந்நாளை எண்ணி ஏங்கிய ஒரு தமிழனின் ஏக்கமாக வெளிப்பட்டுள்ளது. தமிழ் இனி மெல்ல..சாகுமா? தமிழ் இனி மெல்ல… உலகை ஆளுமா? தமிழா உன் கையில்….

ஹரணி, பேராசிரியர், அண்ணாமலை பல்கலைக்கழகம்

தமிழின் தொன்மையும் பழம்சிறப்பும் உணர்வதற்கு மேற்சுட்டியவை ஒரு சிறு சான்றாகக் கொண்டு இப்போது திரு அரிசோனா மகாதேவன் அவர்கள் நாவலான “தமிழ் இனி மெல்ல…” வை அணுகுதல் வேண்டும்.

ஒரு மொழி என்பது ஒரு சமுகத்தின் உருவாக்கம், வளர்ச்சி, மாற்றங்கள், விளைவுகள் இவற்றின் அடையாளம். ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல சமுகமும் மொழியும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கின்றன. ஒருமொழியே ஒரு சமுகமாகவும் ஒரு சமுகமே ஒரு மொழியாகவும் நிலைநிறுத்தப்படுகின்றன. இந்த மொழியினை நேசித்தல், கற்றல், பயன்படுத்துதல், அனுபவித்தல், வளர்த்தல்,அடுத்தக் கட்ட தலைமுறைக்குக் கொண்டு செல்லுதல் என்பவை தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள அனைவரின் தலையாயக் கடமையாகும்.

ஆனால் மொழியின் பயன்பாடு என்பது குறிப்பாகத் தமிழமொழியின் பயன்பாடு என்பது இன்றைக்கு கேலியாகவும் தமிழ் படித்தால் என்ன பயன்? என்பதுபோலவுமான கருத்தாக்கங்கள் மிகுந்து அது மொழியை வளர்ப்பதற்குப் பதிலாக அழிவின் பாதைக்குக் கொண்டு சென்றுவிடுமோ என்கிற பலரின் அசசத்தையும் உணரமுடிகிறது. இது உண்மையான மொழிப் பற்றாளர்களின் உள்ளார்ந்த கவலை.

இந்தக் கவலையே திருமிகு அரிசோனா மகாதேவன்அவர்களின் கவலையும். அயல்நாட்டில் இருப்பிருந்தாலும் மனசு முழுக்க இந்த தமிழ்மொழியின் நிலை குறித்து அது சவலைப் பிள்ளைப்போலப் பராமரிக்கப்படுவது கண்டு உணர்வுப்பூர்வமாக கவலைப்பட்டு இந்நாவலைத் தொடங்கியிருக்கிறார்.

உண்மையில் மகாதேவன் அவர்களின் இந்நாவல் இன்றைக்கான அவசிய சமுகத் தேவையாக உருவெடுத்திருக்கிறது. ஒரு சிறிய குழந்தைக்கு உறவுகளை அறிமுகம் செய்யும் தாத்தாவோ அப்பாவோ அறிமுகம் செய்யும்பொது, “நம்முடைய முன்னோர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா, அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் தெரியுமா, அவரின் செம்மாந்த வாழ்க்கை தெரியுமா, அவர்களின் செயற்கரிய செயல்கள் தெரியுமா? அந்தப் பரம்பரையில்தான் இப்போது நீ வந்து பிறந்திருக்கிறாய்!” எனும்போது அக்குழந்தை தன் பாரம்பரியத்தின் பெருமையை மட்டும் உணர்ந்துகொள்ளாமல், கூடவே தான் எப்படி அவர்களைப் போல வாழவேண்டும் சிறக்கவேண்டும் என்பதையும் கூடுதலாகக் கற்றுக்கொள்கிறது.

இந்த உத்தியைத்தான் திரு மகாதேவன் அவர்களும் இந்நாவலின் வரலாற்றின் வேரைப் பிடித்து சேர,சோழ, பாண்டியர்கள் என்றிருந்தாலும்அவர்கள் மொழிக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு வளர்த்த விதத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நம் மொழியின் பெருமைகளை அடையாளப்படுத்தித் தொடங்கியிருப்பதன் சிறப்பே இந் நாவலாகும்.

காதேவன் அவர்கள் ஒரு போராளியைப் போன்றே இந்நாவலைக் களமாக்கி இறங்கி நிற்கிறார் தமிழ்மொழியின் பெருமையைச் சிதைக்கும் எந்தவொன்றின் எதிராகவும். அவரின் அனுபவப் பின்புலத்தில் இந்நாவல் மெல்ல மெல்ல தமிழின் மாண்பையும் பண்பாட்டையும் படிப்போரின் மனத்துக்குள் இறக்குகிறது. நிச்சயம் இந்நாவல் குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்தும். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்பதுபோல தமிழின் மாண்பையும் அதன் வளத்தையும் தொன்மையையும் காப்பதில் போராடும் சிலரில் மகாதேவனும் ஒருவர் என்றாலும் அவருக்கான தனித்துவம் இந்நாவலின் வழியாகக் குறிப்பிட்ட இலக்கை அடைந்து விளைவுகளை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.

நாலைந்து முறைகளாவது இந்நாவலை வாசிக்கவேண்டும். அப்போதுதான் இன்னும் இதன் செம்மாந்த நோக்கம் மனத்தில் கிளர்ச்சியை உருவாக்கும் என உறுதியாக நம்புகிறேன். திரு மகாதேவன் அவர்களின் முயற்சி வெல்லும் எனப்தோடு தமிழின் மாண்பு ஒருபோதும் எவராலும் நலிவடைந்துவிடாது என்கிற அழுததமான உணர்வையும் பல்வேறு சான்றுகள் வழியாக இந்நாவல் மனத்தில் எழுதிக்கொண்டேயிருக்கிறது.

Paul Daniels, Mesa, Arizona, USA:

The Golden Scroll, The Tamil Legacy… and What Might Have Been…

aris

Here is a journey spanning more than a thousand years — past, present, and future (not always in that order). It is a journey that goes over land, crosses rivers, and that requires ships at sea and aircraft. It is a journey into the hearts and minds of certain citizens (both ancient and modern) — decision makers, and those who are not usually seen as important, and which transcends caste and position. It is a journey about what might have been. There is loyalty to a great cause; there is intrigue; and there are those whose agendas conflict with a grand idea concerning how a people can be united, an idea found in a golden scroll, a document known to only a few…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *