நான் அறிந்த சிலம்பு – 153

மலர் சபா

மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

முன்பனிக் காலம்
வளம் மிக்க வீட்டில் மகளிரும்

அவர் மைந்தரும் விரும்பி
இளநிலா முற்றத்தில்
இளவெயிலை விரும்பி நுகரும்படி              garden
விரிந்த கதிரை உடைய சூரியன்
தெற்கே எழுவதனால்
வெண்மழை அரிதாகத் தோன்றும்
முன்பனிக்காலம் எங்குள்ளது?

பின்பனிக் காலம்
அம்முன்பனிக்காலம் அன்றியும்
மிகப்பெரிய கடலில் உள்ள
நாவாயின் கூட்டத்தாலே
தொண்டி எனும் இடத்தின் அரசர்
திறையாகக் கொடுத்த
அகில் பட்டு சந்தனம் கற்பூரம்
இவற்றின் வாசம் ஒன்றாய்ச் சுமந்து வந்த
கீழ்த்திசைக் காற்று
மன்னனின் கூடல் நகருள் புகுந்து
காமன் அவன் கொடிய வில்லானது
வெற்றிவிழாக் காணும்
பங்குனித்திங்கள் பொருந்திவரும்
பின்பனிக்காலத்தின் அரசன் எங்குள்ளான்?

இளவேனிலை வரவேற்றல்
குருக்கத்தி அழகிய கொடி எடுக்கவும்
இளஞ்சோலையும் நந்தவனமும்
நறுமண மலர்களை ஏந்தவும்
பாண்டிய மன்னன் பொதிய மலைத் தென்றல்
கூடல் நகரில் புகுந்து
தாம் விரும்பும் துணைகளைத் தழுவி இன்புறவைக்கும்
இந்த இளவேனில் அரசன் எங்குள்ளான்?

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 102 – 119
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

படத்துக்கு நன்றி: கூகிள்

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *