-றியாஸ்முஹமட், கத்தார்

படித்த படிப்பும்
வீணாகப் போச்சு
வேலைக்காக அரசியல்வாதி
கால் பிடித்து
மானம் போச்சு!

கையில காசி காணாது
மாமா மச்சினன் உறவுகள்
அறுந்து போச்சு
இதுதானடா உறவுகள்
என்று வெறுத்துப் போச்சு!

வாழ்ந்தும் வாழாமலும்
முடியும் நரைத்துப் போச்சு
காதல் என் காதல்
அது கண்ணீரில் கரைந்து போச்சு!

என் வாழ்க்கை ‘இன்டரஸ்டிங்’
இல்லாமல் போச்சு
இதைப் பார்க்கும் மற்றவர்களுக்கு
ஜாலியாப் போச்சு!

கல்குடா வாழ்க்கை
வளைகுடா வாழ்க்கையாக
மாறிப் போச்சு
தனியாகவே வாழ்ந்து
வெறுத்துப் போச்சு!

‘கிளாமர்’ காலமெல்லாம்
மலையேறிப் போச்சு
உழைத்த பணம் எப்படியோ
தீர்ந்து போச்சு!

ஊர் நிலமைகளை நினைத்து
என் தூக்கமும் போச்சு
ஊர் படையெல்லாம்
பெரும் படையாகவும் ஆச்சு!

பணம் இருந்தால் மாத்திரமே
அரச உத்தியோகம் என்பது
சரியாகப் போச்சு
நாடு ரொம்ப கெட்டு போச்சு!

பட்டம் படித்தவன்
பாலைவனம் மேய்வது
பழகிப் போச்சு
சமூகமும் தம் நிலைமறந்து
போச்சு!

படித்தவர்களுக்கு
வேலை என்பது
குழந்தைப் பேச்சு
இதைக் கேட்டுக் கேட்டு
காதும் புளித்துப் போச்சு!

நம்ம தலைவர்களும்
இப்படியா என புரிந்து போச்சு
காலத்தின் கோலம்
மாறிப் போச்சு!

நாடு ஏன்டா இப்படி
குட்டி சுவராப் போச்சு
என் கதை கேட்டு ஏன்டா
உன் முகம் தொங்கிப் போச்சு!

லாப்டொப்பிலும்,போனிலும்
என் வாழ்க்கை போயாச்சு
ஏன்டா இப்படி வெளிநாட்டு
வாழ்க்கை கருகிப் போச்சு!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.