மீ.விசுவநாதன்

lord-sri-rama

 

உள்ளொன்று வைக்காத உத்தமன் – இன்றும்images
ஊர்போற்றும் மக்களின் காதலன் !
சுள்ளென்று பேசாத சுந்தரன் – தீய
சூழ்ச்சிகள் இல்லாத சோதரன் !
அள்ளென்று சொல்கின்ற தர்மவான் – பகை
அழுக்கினை நீக்குகிற புண்யவான் !
புள்ளினைத் தந்தையாய்ப் போற்றினான் – குகப்
புதையலை நண்பனாய்க் கூட்டினான் ! 

தீதினை நன்மையாய்ச் செய்தவன் – வந்த
திதியையும் தன்னாலே வென்றவன்
மாதினைப் போற்றுகிற மானுடன் – வேறு
மாதினைக் கொள்ளாத நெஞ்சினன்
ஓதிய வார்த்தைக்காய் வாழ்ந்தவன் – ஊர்
ஊதிய வார்த்தைக்கும் தாழ்ந்தவன்
வேதியர் சொல்லினையும் கேட்டவன் – ஒரு
வேடுவனின் பாடுபொரு ளானவன் ! 

மானுட சாதியில் வந்தவன் – மக்கள்ram
மண்ணிலே உற்றதுய ருற்றவன்
மானுடன் மாயையில் ஓடினான் – பெண்
மானுடச் சாயையில் வாடினான் !
ஊனுடல் வற்றிடத் தேடினான் – லங்கை
ஊரிலே வெற்றியும் கூடினான் !
வானுயர் மாருதி நட்பினான் – நம்
மனதிலே ராமனாய் அப்பினான் ! 

(28.03.2015 சனிக்கிழமை ஸ்ரீராம நவமி)

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *