ஒரு ‘குறுக்கிய’ மரத்தின் குலுங்கும் அழுகை!

0

-கவியோகி வேதம்

ஒரு ‘குறுக்கிய’ மரத்தின்(‘போன்ஸாய்”-ன்) குலுங்கும் அழுகை
(நாட்டுப்பாடல்–கொத்தமங்கலம்சுப்பு பாணியில்..!)

வான்நிலவெப் பிடிச்சுவெச்சுக் குடத்தில் அடைப்பதா? – சாமி!
மரம்என்னெக் குறுக்கவெச்சுத் தொட்டி வைப்பதா?
மானெப்போயி வண்டுசைஸ்ல  மாத்தி மகிழ்வதா? – எவனோ*
மந்திரம்போல் செய்ததெநீ காப்பி அடிப்பதா?        bonsai
(*ஜப்பான் குள்ளன்)

அகத்தியனா என்னெஆக்க இந்தப் படுத்தலா? – தொட்டி
அதனெயேநீ வெளியில்வச்சு பணத்தெப் பார்ப்பதா?
முகம்முழுக்க அழுவறேன்உன்  காதில் விழலையா? – அசுர
முட்டாள்உன் உறுப்பெவெட்டிக் காசு பார்ப்பயா?

ராமாயணம்  ஒத்த‘வரி’ல சொன்னா சுகமோடா? – மூடா!
ராகம்பாட மேடைக்கிவந்(து) ஒப்பாரி வச்சேடா!
தேமேன வளர்றகிளையெ நறுக்குற யேடா? – என்ன
தெய்வக்’குத்தம்’ செஞ்செனென்(னு) இத்தெப் பண்றேடா!

உன்னோட கொலவெறிக்கி நான்தான் பலியோடா? – சில
உளுத்தகம்பி யாலசுத்திக் கையெ – முறுக்கறேடா!
உன்நாத்தக் குடைவடிவில என்னெ வளர்க்கணுமோ? – ஏன்!
ஓர்அருவியெ  என்உருவில பார்த்து மகிழணுமோ?

அப்படியும் முயற்சிசெஞ்சு  துளிரெவிட் டாலும் – மடயா!
அழுத்தமாக அத்தெக்கிள்ளிச் சிரிக்கிற யேடா!
தப்படிகள் வெக்கிறதுதான் மனிச நோக்கமோ? – எங்க
சாபங்களெ வாங்கறதுக்கு  ரொம்ப ஏக்கமோ?

‘சைக்கோசெல்’ திரவம்விட்டு மேலும் குறுக்கறே! – உன்
‘சைக்கோத்’தனத்தெ எங்கிட்டகாட்டி நீயே சிரிக்கறே!
வைக்கோல்ல உன்னெத்திணிச்சுப்  பார்க்க ஆசைடா! – பாவி
வருகுதடா ஆத்திரமாய் உன்னெயப் பார்த்தடா!

உன்குழந்தெ பெரிசாறதுல ஆசையிருக் காதோ? – ‘மர’
உறவினரெப் பார்த்(து)எனக்கும் ஏக்கமி ருக்காதோ?
உன்குழந்தெ கையாட்டுனா சிரிக்க மாட்டயோ? – அடஎன்
ஓவ்வோர்இலை நறுக்கும்போதும் உணர மாட்டயோ?

தென்றல்பாத்துத் தலையஆட்ட உணர்ச்சி எழும்புது! – நீ
செஞ்சவேலை  யாலஒடம்பில் கோபம்  பொங்குது!
“மன்றம் ஐ.நா.” என்சார்புல பேசக் கூடாதா? – மனுச
மண்டயிலதட்ட சட்டமொண்ணு செய்யக் கூடாதா?

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.