கடல் கடந்தும் தமிழன் கலை மிளிர்கிறது!

0

தமிழ்த்தேனீ

அயல் நாட்டில் தமிழ் நாடகம் நடத்தி இந்தியாவுக்கு நன்கொடை அளிக்கும் தமிழர்கள்!

கடல் கடந்தும் தமிழன் கலை மிளிர்கிறது!

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழில் மக்களின் உணர்வுக்கு விருந்தாகத் திகழ்வது செவிக்கு இசையும் வசனங்களும் கண்ணுக்கு விருந்தாக நாட்டியம், நடிப்பும். ஒளி ஒலி ஆகிய எல்லாம் சேர்ந்த கலவையாக நமக்கு விருந்தளிப்பது நாடகக் கலையே.

நவீன விஞ்ஞான உலகிலே கைவிரல் சொடுக்கிலே தொலைக் காட்சி நிகழ்ச்சிகள், தொலைத் தொடர்கள், திரைப்படங்கள் என்று கண் முன்னால் விரிந்து.கையெதிரே சுவையான நொறுக்குத் தீனிகளும் அமைந்து நம்மை வீட்டை விட்டு நகரமுடியாமல் செய்து சுகவாசிகளாக்கி வைத்திருக்கும் இந்த நாட்களில் வெளியே இருக்கும் வாகன நெரிசலில் சிக்கி அரங்கத்துக்கு சென்று நாடகம் பார்க்கும் ஆவலைத் தகர்த்துவிட்டது.

அதனால் இந்தியாவில் தமிழ்நாட்டிலேயே நாடகம் சற்று நலிந்து போயிருக்கிறது என்பது உண்மை அப்படிப்பட்ட நாடகக் கலைக்கு புத்துயிரூட்டும் பணியை தொடர்ந்து பத்தாண்டுகளாக அமெரிக்காவில் செய்கிறார்கள். அதுவும் குறிப்பாக இந்தியாவிலிருந்து இங்கே அமெரிக்காவுக்கு வந்து தங்கள் பணிகளையும் திறமையாக நிர்வகித்துக் கொண்டே நாடகக் கலையையும் வளர்க்கிறார்கள் தமிழர்கள்.

இண்டஸ் கிரியேஷன்ஸ்
www.IndusCreations.org

இந்தியாவையும் India அமெரிக்காவையும் U.S. இணைத்து Indus Creations இண்டஸ் கிரியேஷன்ஸ் என்று பெயர்கொடுத்து நல்லுறவு வளர்த்து தமிழ்நாடகம் போடுகிறார்கள். இப்படி நாடகக் கலையை நம் தமிழர்கள் அமெரிக்காவில் வளர்க்கிறார்கள் என்பது ஆச்சரியம்! ஆனால் உண்மை. இவர்களே திட்டமிட்டு நடத்தும் இந்த நாடகங்களில் இருந்து வந்த வருவாயிலிருந்து இதுவரை நம் இந்திய நாட்டில் இயங்கும் பல தொண்டு நிறுவனங்களுக்கு கிட்டத் தட்ட ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக அளித்திருக்கிறார்கள்.

நாடகத்தில் இன்டஸ் குழுவினர்

att

ath
சியாட்டில் மாகாணத்தில் மைக்ரோசாப்ட், கூகிள்,மற்றும் அமேசான் போன்ற அலுவலகங்களில் பணிபுரியும் இந்திய நாட்டு பொறியாளர்கள் இளைஞர்கள் யுவதிகள் ஆகியோரை இணைத்துக்கொண்டு சியாட்டில் எனும் மாகாணத்தில் “இண்டஸ் கிரியேஷன்ஸ்” என்னும் அமைப்பை உருவாக்கி அதன் மூலமாக தொடர்ந்து 10 ஆண்டுகளாக தமிழ் நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கடல் கடந்தும் தமிழன் கலை மிளிர்கிறது

இண்டஸ் கிரியேஷன்‌ஸ்” குழுவினர் கதை எழுதுவது மட்டும் அல்லாமல், அசத்தலான நடிப்பு, இசை மற்றும் வியக்க வைக்கும் அரங்க வடிவமைப்பு மூலமாக மக்களை வசீகரிக்கின்றனர். இவர்கள் முழு நீள நகைச்சுவையில் இருந்து, உணர்ச்சிப் பெருக்கெடுத்தோடும் கதைகள் வரை பலவிதமான கதைகளைக் கையாண்டுள்ளனர். 2007ஆம் ஆண்டு அரங்கேறிய சுஜாதா அவர்களின் “கடவுள் வந்திருந்தார்” என்ற நாடகத்தில் ஒரு அயல் கிரக விண்கலம் சுற்றி வந்து அரங்கில் இறங்கி மக்களை வாயைப்பிளக்க வைத்தது. 2009ஆம் ஆண்டில் அரங்கேறிய “லண்டன் எக்ஸ்பிரஸ்” நாடகம் மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது மட்டும் அல்லாமல் ஒரு விமான நிலையத்தையே அரங்கில் கொண்டு நிறுத்தி மக்களை வியக்க வைத்தது.

2011ஆம் ஆண்டில் நடந்த “சக்கரவியூகம்” எனும் நாடகம் சிரிப்பும் மர்மமும் கலந்து ரசிகர்களை அடுத்து வரப்போவது என்ன என்று ஆவலுடன் நுனி நாற்காலியில் உட்காரவைத்தது. 2012ஆம் ஆண்டில் நடந்த “உள்ளே வெளியே” நாடகத்தில் இரண்டு அடுக்கு மாளிகையை அரங்கில் அமைத்தது மட்டுமின்றி, பாதியில் மொத்த அரங்கைப் பின்புறமாகத் திருப்பி அங்கு நடக்கும் கதையைக் காட்டிய தருணத்தில், பார்ப்போர் சிலர் மயங்கி விழாத குறை தான். சில நாடகங்களில் காட்சிகளை மேடைக்குப் பதிலாக, காண்போர் மத்தியில் நடத்தி, எதிர்பாராத ஆச்சரியத்தை ஏற்படுத்திவிடுகின்றனர். சமீபத்தில் நடந்த “நினைத்தாலே நடக்கும்” நாடகத்தில் கதை செல்லும் பாதையை மக்களின் கூற்றுக்கு ஏற்ப மாற்றி அமைத்து, அவர்கள் நினைத்ததை, மேடையில் நடித்துக் காட்டினர்.

மாடியுடன் கூடிய சுய அரங்க வடிவமைப்பு

ath2

மேலும் மேடை அரங்கத்தையும் இவர்களே திட்டமிட்டு உருவாக்கி வர்ணங்கள் தீட்டி,ஓவியங்கள் வரைந்து தட்டிகள் செய்து நிர்வகிக்கிறார்கள்,இசை இவர்களே அமைக்கிறார்கள், ஒலி ஒளி மற்றும் மேடை நிர்வாகம் உட்பட அனைத்து கலைகளையும் இவர்களே வடிவமைக்கிறார்கள் , அரங்க வடிவமைப்பு போன்றவைகளும் செய்கிறார்கள். அரங்க நிர்மாணம் செய்கிறார்கள். தொடர்ந்து பத்து ஆண்டுகளாக மிக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள் கடல் கடந்தும் தமிழன் கலை மிளிர்கிறது.

நாடகத்தில் ஒரு தந்திரக் காட்சி

ath1

இண்டஸ் குழுவினரின் அரங்கம் நிறைந்த ரசிகர்கள்

ath3

மேலும் நம் நாட்டில் உள்ள பல கிராமங்களை தத்தெடுத்து பலருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி பொதுத் தொண்டு செய்து வருகிறார்கள். கடல் கடந்து வந்து பணி செய்தாலும் நம் நாட்டை மறக்காமல் தமிழையும் நம் கலைகளையும் வளர்க்கும் இவர்களைப் பாராட்டி ஊக்கம் அளிப்பது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்.

இதுவரைஅரங்கேற்றப்பட்ட நாடகங்கள்

சிதம்பர ரகசியம் – June 2015

ath4

இண்டஸ் குழுவினரின் தொடர் முயற்சியால் ஒன்பது ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்கி இந்த 2015 ஆம் ஆண்டு வெற்றிகரமான பத்தாம் ஆண்டாக மலர்ந்து “சிதம்பர ரகசியம்” என்னும் நாடகத்தை அரங்கேற்ற உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த இண்டஸ் குழுவினர். வரும் ஜூன் மாதம் 19ம் தேதியும் 20 ம் தேதியும் இரு முறை அரங்கேறவுள்ளது இந்த “சிதம்பர ரகசியம்”

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புகளைச் சொடுக்கிப் பாருங்கள், இவர்களின் திறமை புரியும்! வாழ்த்துவோம், பாராட்டுவோம்!!

அன்புடன்
தமிழ்த்தேனீ
rkc1947@gmail.com http:thamizthenee.blogspot.com

இண்டஸ் கிரியேஷன்ஸ்
www.IndusCreations.org

இண்டஸ் கிரியேஷன்ஸ் Facebook தளம்
https://www.facebook.com/induscreations

இண்டஸ் கிரியேஷன்ஸ் YouTube தளம்
http://www.youtube.com/induscreations2010

இண்டஸ் கிரியேஷன்ஸ் சில புகைப்படங்கள்
Indus Creations photos

சில காட்சிகள்
https://www.youtube.com/watch?v=fmXk-MPRyWE
அரங்க நிர்மாணம்
https://www.youtube.com/watch?v=c_FMJ7sIpw0

ரசிகர்களின் விமர்சனம் https://www.youtube.com/watch?v=7VkFdyfmnz0

Attachments area
Preview YouTube video London Express : Indus Creations tamil play : 2009

London Express : Indus Creations tamil play : 2009
Preview YouTube video Time Lapse – Indus Creations – Chakravyugam

Time Lapse – Indus Creations – Chakravyugam
Preview YouTube video Indus Creations – Chakravyugam 2011 – Audience Feedback

Indus Creations – Chakravyugam 2011 – Audience Feedback

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *