-பா. ராஜசேகர்

பிண்டம்
நடமாடும்
ஐம்புலன்கள்
வரமாகும் !

அண்டம்                                                                 earth-day
உருண்டோடும்
பஞ்சபூதங்கள்
விதியாகும் !

நீர் நிலம்
காற்று
ஆகாயம்
நெருப்பு
அதுவன்றோ ?

நீரின்றி
அமையாது
உலகு என்பர் !

நெருப்பின்றி
விழையாது
என்பேன் !

வெயிலுக்குக்
குடை கண்ட
மனிதனே !

உலகுக்குக் குடைதந்த
இறைப் பரிசு
ஓசோன் அன்றோ ?

விஞ்ஞானம்
படைத்தவனே
மெய்ஞ்ஞானம்
மறந்ததென்ன ?

இறைவனின்
படைப்பெல்லாம்
இவ்வுலகைக்
காத்து நிற்கும்!

மனிதா உன்
படைப்பெல்லாம்
இயற்கையை
அழிப்பதென்ன ?

ஓசோனில்
ஓட்டைகண்டு
இவ்வுலகை
எரிப்பதென்ன ?

வெப்பம் தடுப்போம் !
உலகைக் காப்போம் !!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *