பூமி வெப்பம் தடுப்போம் !
-பா. ராஜசேகர்
பிண்டம்
நடமாடும்
ஐம்புலன்கள்
வரமாகும் !
அண்டம்
உருண்டோடும்
பஞ்சபூதங்கள்
விதியாகும் !
நீர் நிலம்
காற்று
ஆகாயம்
நெருப்பு
அதுவன்றோ ?
நீரின்றி
அமையாது
உலகு என்பர் !
நெருப்பின்றி
விழையாது
என்பேன் !
வெயிலுக்குக்
குடை கண்ட
மனிதனே !
உலகுக்குக் குடைதந்த
இறைப் பரிசு
ஓசோன் அன்றோ ?
விஞ்ஞானம்
படைத்தவனே
மெய்ஞ்ஞானம்
மறந்ததென்ன ?
இறைவனின்
படைப்பெல்லாம்
இவ்வுலகைக்
காத்து நிற்கும்!
மனிதா உன்
படைப்பெல்லாம்
இயற்கையை
அழிப்பதென்ன ?
ஓசோனில்
ஓட்டைகண்டு
இவ்வுலகை
எரிப்பதென்ன ?
வெப்பம் தடுப்போம் !
உலகைக் காப்போம் !!