கிரேசி மோகன்
ஓவிய மேதை கோபுலு சார் இறைவனடி சேர்ந்தார்….அமுதசுரபி தீபாவளி மலரில் அட்டைப் படமாக வந்த
அவரது சாகா வரம் பெற்ற சில ஓவியங்களும் அதற்கு அடியேன் எழுதிய வெண்பாக்களும்….கிரேசி மோகன்….
சக்தி வேல் அளிப்பு….
—————————————-

acraz1
பாலை அளித்து, பராசக்தி பையனுக்கு,
வேலை அளிப்பதை வண்ணமிகு,-கோலமாய்,
தீட்டிய கோபுலுசார், திவ்யக் கரங்களில்
நாட்டியக் கோனின் நகாசு ….

————————————————————————————————————————-
விம்மல்-கே(வல்)-சம்பந்தனுக்கு விடையேறி வந்து அமுதூட்டல்….
———————————————————————————————————-

acraz2
பாலுக்கழும் சம்பந்தப் பிள்ளைக்குப் பொற்கிண்ணத்
தாலளிப்பு தந்தை குளிப்பதற்குள் , -காலப்பன்
ஆ!பளு நீங்க அமைதியாய் நந்தீசர்:
கோபுலுசார் கைவண்ணம் காண் ….
———————————————————————————————————————–
அழகுக்கு அழகு செய்யும் அனுஸூயா
———————————————————————

acraz3
கானகத்துப் பார்லரில் ,காகுத்தன் பத்தினி,
ஜானகிமா னுக்(கு)அனு ஸூயாபொன் -பூணுவதை,
தொய்வில்லா கோபுலுசார் தீட்டியதைக் காண்போர்க்கு
கைவல்ய வெண்ணை களிப்பு ….கிரேசி மோகன்….
————————————————————————————————————————-

கேசவ்,ம சே,கரத்தில் கோபுலுசார் வாழ்ந்திடுவார்,
ஆசானுக் இல்லைகாண் அந்திமம்: -வீசுகின்ற
கோடுகளே கோபுலுசார் கைலாசம், வைகுண்டம்,
சீடர்களின் சித்திரம்சாட் சி ….கிரேசி மோகன்….

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.