-சுரேஜமீ

கணையம்
கடவுள் கொடுத்த
வரம்!

ஐம்புலன்களை
அடக்கவில்லை எனில்                             liver
ஆறறிவின்
பயனேது?

உண்ணும் உணவே
சர்க்கரையாய்  மாறி,
இரத்தத்தில் கலந்து,
சத்தாக மாறும்,
என அறிவியல்
சொல்லியும்
அறியாமல் நாம்,
துரித உணவும்,
நினக்கும்போதெல்லாம்
உண்பதும்,
கணையத்திற்கு ஒவ்வா!

வண்டு தேனை
மலரிலிருந்து
உறிஞ்சுவது போல,
கணையம்
சர்க்கரையைப்
பிரித்தெடுக்கும்!

செரிமானத்திற்க்குத்
தேவையான
கணைய நீர்
சுரக்கா சர்க்கரைச்
சிறுநீராய் வெளியேற,
முறையான சர்க்கரை
இரத்தத்தில் கலக்கிறது!

தேவைக்கு மிகுதியானால்
சேமிப்பும் நடக்கும்!
என்ன விந்தை
இறைவன்
படைப்பில்!

சேமிப்புக் கரைந்தாலோ,
கணையம் ஏற்காத
சர்க்கரை உடலில்
இருந்தாலோ,
நோய் என்று சொல்கிறது
மருத்துவம்!

மனிதா
சற்றே யோசி!
காரணம்
கடவுளின்
படைப்பா?
உனது
பரபரப்பா?

நிதானமாக
உண்!
நினைவோடும்
கால அளவோடும்,
உண்!
நோயற்று,
உன்னதமாக
வாழ்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *